ஞாயிறு, 27 நவம்பர், 2011

நகரத்தார் கல்யாணங்களில் சாமான் பரப்புவது


ஆச்சிமார்களின் சேமிப்பும், சிக்கனுமும் 
சாமான்களாக உருமாறுகின்றன. 
தாயிலுருந்து மகள், மகளிருந்து மகள் என்று 
பெயர் மாறுகின்றன. 
வைத்தது, பார்க்காமலே, புழங்காமலே, 
வீடு மாறுகின்றன.
பெண் குழந்தை பிறந்துவிட்டாலே,
பெண்ணும் வளருவாள்.
சாமான்களும் வளரும். 
வசதி அதிகம் உள்ளவரிடையே, 
வாய்ப்பும் அதிகம்,
வாங்குவதும் அதிகம்.
வைப்பதும் அதிகம்.  
சாமான்கள் வைக்கவேண்டுமா?
தேவைதானா ? என்று கேட்டால்,
பலசமயம் அவை பலருக்கு 
உதவியதுண்டு. 
உள்ளவர்கள் கொடுப்போம். 
கொடுப்பதாலே நிறைவதுமில்லை,
கொண்டு வருவதாலே குறையொன்றுமில்லை.  
கட்டாயப்படுத்தி வாங்குவதே  தவறு   என்பேன். 

சனி, 19 நவம்பர், 2011

கலை தந்தை கருமுத்து தியாகராசர் செட்டியார்



எட்டி நின்று பார்த்தவுடனே,
கட்டிடம் கட்டியது, 
யார் என்று கேட்கச் சொல்லும். 
அருகே சென்றவுடன், கட்டியது யார் 
என்று தெரிந்துவிடும்.


ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகிருக்கும், 
ஒரு கதையிருக்கும். 
நுழை வாயில் கதவுத் தூண் ஒரு  அழகு, 
நிலை வாசல் கதவு ஒரு அழகு, 
சன்னல்கள் அழகு, 
சன்னல்  கம்பிகளும் அழகு,   
மாடங்கள் அழகு, 
மாடிப்படிகளும்  அழகு,
கட்டிடங்களுக்கு அழகு சேர்த்த பேராசான். 


எண்ணத் தொலயாத வடிவங்கள், 
அத்தனையும் கண்ணில் பட்டவுடன், 
நயம் சேர்க்கும் கட்டிடமாய் உருவாகிவிடும் .  


வசிக்கும் வீடு என்றில்லை, 
வாசிக்கும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் அழகு சேர்த்தாய், 
வாழ்வளிக்கும தொழிற் கூடங்களுக்கும் அழகு சேர்த்தாய்.   
கலை நயம் மிக்க கட்டிடங்கள் மட்டும் நங்கள் பார்கவில்லை, 


மரத்திலே மண்டபங்கள், 
சுதையிலே சிற்பங்கள், 
விதானத்திலே விதவிதமாய் வடிவங்கள், 
ஒன்றுபோல் ஒன்றில்லை, 
ஒவ்வொன்றும் வேறுவேறாய், 
அத்தனையும் அழகு.


கண் கண்டது கருத்திலே உருவாகும், 
கலைமிகு பொருளாய் உருமாறும். 
கற்கோவில்கள் கண்டவரிடையே,
கற்பிக்கும் கோவில்களும் தந்தவர். 


கலை தந்தை நீ என்று சொல்லுவார்,
கலை தந்தை மட்டுமல்ல, 
கல்விக்கும்   தந்தை , தொழிலுக்கும்   தந்தை, 
எண்ணிலார் வாழ்வு கொடுத்த செம்மல்.   
நாங்கள் வளர உங்கள் ஆசி வேண்டும். 
அனுதினமும் உங்கள் நினைவை போற்றி, 
வணங்குகின்றோம். 
(சோமசுந்தரம் அருணாசலம் )  

செவ்வாய், 15 நவம்பர், 2011

என் வாழ்க்கை



நகரத்தாராக நான் பிறந்தேன்,    
நலமாக நான் வளர்ந்தேன். 
நகரத்தார் என்பதிலே எனக்கு என்றும் பெருமை. 
தேவகோட்டை எனது ஊர் என்பதிலே, 
மேலும் ஓர் பெருமை. 

தாய் தந்த பொறுப்பும், 
தந்தை தந்த செல்வமும், 
குரு கொடுத்த கல்வியும், 
கடவுள் காட்டிய கருணையும், 
என் வாழ்வை நிலை நாட்டியவை.

குலம் கொடுத்த பெருமை, 
நான் பெற்ற சிறப்பு. 
பிறந்த குடும்பம், 
என் வாழ்வின் சிறப்பு. 
முன்னோர் செய்த தர்மம்,
தலை முறை காத்திடும் புண்ணியம். 

பெற்ற கல்வி என்னை வழிநடத்தியது, 
உற்ற துணையாய் என்றும் காக்கிறது. 
தடம் மாறாமல் பாரம்பரியமாய்  நின்ற பயன், 
இறைப்பயனாய் வாழ்வில் ஒளி கூடியது. 

சொக்கேசன் மதுரையிலே குடிகொண்ட வாழ்க்கை. 
மனை வாழ்க்கை தந்த மகிழ்ச்சி, 
மக்கட் செல்வம் மூன்று. 
மாறுபட்ட கருத்து வந்த போதும், 
மனம் ஒன்று பட்டதாலே,
தினம் கண்டோம் நெகிழ்ச்சி.

பிள்ளைகள் பெயர் சொல்லப் பிறந்தன, 
சொன்ன சொல் கேட்டதாலே, 
கல்வியில் உயர்வு, வாழ்கையில் சிறப்பு. 
மனையாளின் சிறப்பு,    
பிள்ளைகளின் வளர்ப்பு. 

தொழிலில்  தொய்வு கண்ட போதும், 
நிலையாய் நின்றதாலே, இடர்கள் நீங்கின. 
வாழ்க்கைப் பாடம் வழி காட்டிட, 
வரும் நாட்கள் மகிழ்ச்சி கூடியது.  

உண்மை நிலைபெறா காரணத்தால், 
உற்ற உறவுகள் உண்மையாகவில்லை. 
பணமே பிரதானம் என்பாரிடயே, 
சொந்தம் பந்தம் உறவாவதில்லை.

அலைகடலுக்கு அப்பாலே, 
மலை நாட்டில் முன்னோர், 
கொள்முதலாம் அழியாச்செல்வம்,
செம்பனை தோட்டமும் சிறப்பாய் பெற்றேன். 
சீரான வாழ்வு கண்டேன். 

வரும் பொருளைத் தரும் குமரன், 
பேராக் தெண்டாயுதபாணி கடவுள், 
தந்தது கோவில் நிர்வககிக்கும்,     
ஒருவராகப் பெரும் பொறுப்பு. 

மீனட்சி தந்த மதுரையிலே, 
நான் இருந்த காரணத்தால், 
நான்மாடக் கூடலில் நகரத்தார் சங்கத்தின், 
தலைவராய் இருக்க பேரு பெற்றேன். 
அருமையான குழு, 
அன்னையின் அருளாலே அத்தனையும் 
சிறப்பாய் நடேந்தேறின. 
மனம் நிறை செல்வம், 
வளம் தந்த வாழ்வு,  
ஏற்றம் இறக்கம் இல்லாத,  
மாற்றம் அற்ற வாழ்க்கை. 

கண் கண்ட தெய்வம், கவி மதுரை மீனாட்சியும், 
தினம் காத்திடும் பேரா தண்டயுதபாணியும்,  
என் வாழ்வின் ஆதாரங்கள், 
எனை வாழ வைக்கும் தெய்வங்கள். 

நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், 
வற்றாத அன்பும், நீங்கிடும் தீமையும், 
கொடுத்து உதவும் குணமும்,  
மாறிடும்  பகையும், நான் பெற வேண்டும். 

மீனாட்சி தாயே !
நான் கேட்க்கும்  வரமும், வளமும், தர வேண்டும்.
அனுதினமும் காத்து அருளவேண்டும்.  

வெள்ளி, 4 நவம்பர், 2011

நடன விடுதியில் நட(ன)மாடும் நங்கையின் வாழ்கை


சதிராடும் சதை பிண்டம் 
சடுதியில் மாறிவிடும் 
தன் நிலை நினையாமல் 
தவறவிட்டால் உன் உண்மை நிலை 
உனக்கு புரியாமலே போய்விடும் 
எத்தனை முறை கழுவினாலும் உன்
கர்மம் தொலையாது
மூடிய அறையில்உன் பிழைப்பு  காசுக்காக
முச்சந்தியில் பிச்சைக்காரன் பிழைப்பும் காசுக்காக
அவன் பிழைப்பு மேலானது

செவ்வாய், 1 நவம்பர், 2011

நகரத்தார் நலம் காத்திடும் தண்ணீர் மலையான் !


வளம் கொழிக்கும் பினாங்கு நகரில், நகரத்தார்
நலம் காத்திடும் தண்ணீர் மலையான் !

வெள்ளி ரதத்தில் பவனி வரும் அழகோ பேரழகு!   
துள்ளி வரும் காவடியும் ,தவழ்ந்து வரும் நடையழகும்,  
தை பூச நன் நாளில், காண்போர் இல்லமெல்லாம் 
குடிகொண்டுருப்பான்    தண்ணீர் மலையான் !
    
பதைபதைக்கும் மனதிற்கும் ,
தவமிருந்து வேண்டிடும் சுகத்திற்கும்,
அண்டிவரும் அடியாருக்கும், 
ஆனந்தம் தந்திடுவான் தண்ணீர் மலையான் !

சீனர்களின் பக்தியும் , சிதறிடும் தேங்காயும்
கூடிடும் மக்கள் கூட்டமும், 
ஓம் என்ற பிரணவமும், ஓம்கார நாதமும், 
தமிழ் வேதம் தந்த நாதனின் கருணையல்லவா! 
பினாங்கு நகர் வாழும் தண்ணீர் மலையானின்
அருள் அல்லவா ! 

நித்தமும் பக்தியாய் வணங்கிட்டோர், 
புத்தியில் நிறைந்திட்ட தன்னிகரில்லா, 
தண்ணீர் மலையான் தாள் பணிவோம்
வளம் யாவும் பெறுவோம்.