பிறப்பின் மேலாம் நிலை,
பிரிதோர் சொல் கேளாமை.
உறவின் உன்னதம்,
உடனிருந்து நலம் செய்தலே.
கற்றவை கடனென்றே,
பலருக்கும் கொடுத்திடல் வேண்டும்.
செய்வன திருந்தச் செய்தல்,
உயர்வுக்கு ஒரு வழியாம்.
மேற் சொன்னவையாவும்,
உங்கள் தனிச் சிறப்பு.
வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் நினைவில்
நின்று மகிழ்ச்சி தரும் நாள்.
மகிழ்வோடு, நலம்யாவும் பெற்று
சிறக்க வாழ்த்துக்கள்.