வியாழன், 24 செப்டம்பர், 2015

சுந்தரேசன் சம்பந்தம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து 24.09.2015



பிறப்பின் மேலாம் நிலை,
பிரிதோர் சொல் கேளாமை.
உறவின் உன்னதம்,
உடனிருந்து நலம் செய்தலே.
கற்றவை கடனென்றே,
பலருக்கும் கொடுத்திடல் வேண்டும்.
செய்வன திருந்தச் செய்தல்,
உயர்வுக்கு ஒரு வழியாம்.

மேற் சொன்னவையாவும்,
உங்கள் தனிச் சிறப்பு.
வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் நினைவில்
நின்று மகிழ்ச்சி தரும் நாள்.
மகிழ்வோடு, நலம்யாவும் பெற்று
சிறக்க வாழ்த்துக்கள்.

வள்ளல் அழகப்பர்

கொடைக்கோர் கர்ணன்,
கண்ணார கண்டோமில்லை.
கொண்டதல்லாம் கொடுத்த வள்ளல்
அழகப்பர்.
கண்ணார கண்டோம்.

கல்வியே காலமெல்லாம் காக்குமென்று,
கல்விச் சாலைகள் பல ,
காரை நகர் கண்ட வள்ளல்.

எழுதிப் பார்க்க முடியாத தர்மங்கள்,
எண்ணிப் பார்க்க முடியாத கொடைகள்.

மண் பரப்பும் ,விண் விரிப்பும்,
உள்ளளவு உயர்ந்த புகழ் நிலைக்கக் கண்டோம்.