ஞாயிறு, 17 மே, 2015

நான் உன்னுள்ளே, இருக்கிறேன் .

நான் உன்னுள்ளே, இருக்கிறேன் .
நீ ,என்னுள்ளே இருக்கிறாய் .
பின் எப்படி நான் நானாக இருப்பேன் ?

என் விழிகள் ,இரண்டென்றாலும்,
பார்வைகள்  நான்கென்பேன்.
என் கண்களுக்குள்ளே, நீயே இருப்பதால் ,
இமைகள் மூட மறுக்கின்றன .

ஒட்டி உறவாட, உடல்கள் இருக்க ,
உள்ளம் உறங்கிட உன் மனதை தந்துவிடு !
அள்ளி அணைப்பது ,கைகலென்றாலும் ,
சொல்லிக் கொடுத்தது நீயல்லவா?

உன்  மேனி தரும் வாசம்,
அதுவே என் மூச்சின் சுவாசம் .
நலம்  அனைத்தும், சுகமென்றாலும்,
நயம் தரும் உன் சொல்லே சொர்க்கமென்பேன்.