புதன், 26 மார்ச், 2014

"தாம் பத்தியம்"

"தாம் பத்தியம்" 

சொல்லாமல் கொள்ளாமல்
நானிருக்க
சொல்லவருவதை சொல்லாமல்
நீயிருக்க
வாழ்வது  வாழ்கை
வருடங்கள் தேய்ந்து
மறைந்த போதும்
பிரச்சினை இல்லை
பிக்கு இல்லை

நினைப்பதெல்லாம் நடந்தன
நினைவெல்லாம் மலர்ந்தன
என்ன சுகம் பெறவில்லை
எடுத்துச் சொல்ல யாருமில்லை

கைகோர்த்து களித்திருப்பது
மட்டும் வாழ்க்கையில்லை
கை பிடித்தவள் கலங்கா  திருக்கவேண்டும்

தாம்பத்தியத்தில்
"பத்தியம்" உண்டு

விட்டுக் கொடுக்க வேண்டும்
நீ பெரிது நான் பெரிது
எக்காளம்  வேண்டாம்
எடுத் தெறிந்து பேசாமல்
எது வந்த போதும்
இணைந்திருபோம்
என்று சத்தியம் கொள்ளல்
அதுவே பத்தியமாகும் 

பெண்ணே, பெண்ணே ,


பெண்ணே, பெண்ணே ,
கடவுள் படைத்த பொன்னே !
பொறுமையின் மறு பெயரே !
மறுப்பேதும் சொல்லாமல்,
மலரும் மருந்தே !

கொடுப்பதும் ,பெறுவதும்,
முறையென்ற  போதும் ,
கொடுப்பது மட்டுமே,
உன் சிறப்பல்லவா !

காப்பதும் ,அளிப்பதும்,
சிறப்பென்ற போதும் ,
மறுப்பின்றி அதனைச்
செய்வது உன்னழகல்லவா !

பெண்ணென்று பிறந்து ,
குடும்ப பெருமை போற்ற ,
ஒளிர்ந்திடும் உயர்வே ,
உவந்தளிக்கும் தருவே .

கண்ணென்றே கணவனையும் ,
கண்ணின் மணியென்று பிள்ளைகளையும் ,
நாளும் போற்றிக் காத்திடும்
நடமாடும் தெய்வமே ! 

அன்னையவள் அன்பிற்கு,
அவனியில் ஈடு இணையுண்டா ?
படும் பாடு சொல்லாமல்,
படுவதே சுகமென்று ,
பார்த்தறிந்த மனமே .

கரு காத்து , உரு தந்து,
உயிர் கொடுத்த உன்னதமே !,
உன்மொழியில்  உன்பெருமை
அள்ளி எடுத்து அருமை
முத்தம், தருவதும்
பெறுவதுமே உன் சிறப்பு.