புதன், 26 மார்ச், 2014

"தாம் பத்தியம்"

"தாம் பத்தியம்" 

சொல்லாமல் கொள்ளாமல்
நானிருக்க
சொல்லவருவதை சொல்லாமல்
நீயிருக்க
வாழ்வது  வாழ்கை
வருடங்கள் தேய்ந்து
மறைந்த போதும்
பிரச்சினை இல்லை
பிக்கு இல்லை

நினைப்பதெல்லாம் நடந்தன
நினைவெல்லாம் மலர்ந்தன
என்ன சுகம் பெறவில்லை
எடுத்துச் சொல்ல யாருமில்லை

கைகோர்த்து களித்திருப்பது
மட்டும் வாழ்க்கையில்லை
கை பிடித்தவள் கலங்கா  திருக்கவேண்டும்

தாம்பத்தியத்தில்
"பத்தியம்" உண்டு

விட்டுக் கொடுக்க வேண்டும்
நீ பெரிது நான் பெரிது
எக்காளம்  வேண்டாம்
எடுத் தெறிந்து பேசாமல்
எது வந்த போதும்
இணைந்திருபோம்
என்று சத்தியம் கொள்ளல்
அதுவே பத்தியமாகும் 

பெண்ணே, பெண்ணே ,


பெண்ணே, பெண்ணே ,
கடவுள் படைத்த பொன்னே !
பொறுமையின் மறு பெயரே !
மறுப்பேதும் சொல்லாமல்,
மலரும் மருந்தே !

கொடுப்பதும் ,பெறுவதும்,
முறையென்ற  போதும் ,
கொடுப்பது மட்டுமே,
உன் சிறப்பல்லவா !

காப்பதும் ,அளிப்பதும்,
சிறப்பென்ற போதும் ,
மறுப்பின்றி அதனைச்
செய்வது உன்னழகல்லவா !

பெண்ணென்று பிறந்து ,
குடும்ப பெருமை போற்ற ,
ஒளிர்ந்திடும் உயர்வே ,
உவந்தளிக்கும் தருவே .

கண்ணென்றே கணவனையும் ,
கண்ணின் மணியென்று பிள்ளைகளையும் ,
நாளும் போற்றிக் காத்திடும்
நடமாடும் தெய்வமே ! 

அன்னையவள் அன்பிற்கு,
அவனியில் ஈடு இணையுண்டா ?
படும் பாடு சொல்லாமல்,
படுவதே சுகமென்று ,
பார்த்தறிந்த மனமே .

கரு காத்து , உரு தந்து,
உயிர் கொடுத்த உன்னதமே !,
உன்மொழியில்  உன்பெருமை
அள்ளி எடுத்து அருமை
முத்தம், தருவதும்
பெறுவதுமே உன் சிறப்பு.


செவ்வாய், 25 மார்ச், 2014

மனம் மகிழ்ந்து நிலைக்க .......



கண்ணில் காண்பவை காட்சிகளாக
மனதில் நினைப்பவை நினைவாக
மறக்க நினைப்பவை மறுதலிக்க
மனம் மகிழ்ந்து நிலைக்க நிலையென்ன?

நடப்பவை நலமென்றால்
மகிழும் மனம்
மாற்றி நட்டக்க
தடுமாறுதே தினம்

வருவது எதிர்கொண்டு
துணிவதனை கைகொண்டு
மலர்ச்சி உன் வசமென்று
உணர்ந்துவிடு நலமாகும்

எண்ணத்தில் உண்மை
செயல்திறனில் எளிமை
உதவும் மனதில் வளமை
பண்பான சொல்லில் இனிமை
பழகிக் கொண்டால்
பரவசமாகும் வாழ்க்கை 

ஞாயிறு, 16 மார்ச், 2014

இன்றைய உலகம்



திரும்பிய பக்கமெல்லாம்,
அநியாயம்,  அவலக் காட்சிகள் .

ஏன் இப்படி என்று கேட்டால் ,
இதை மாற்ற உன் முயற்சி
என்ன என்கிறார் ?

என் நிலையும், 
எழுத்தறிவித்தவன்
நிலையும், ஒன்றே
என்றேன் .

எழுத்தறிவித்தவன்,
சொல்லிக் கொடுத்தபின் ,
என்னை நினைப்பதில்லை,
கூட வருவதில்லை .

நானும்  அவலக் காட்சிகள் ,
பார்த்த பின் அதைப்
பற்றி நினைப்பதில்லை .

குறும்பு பா -2


பதவி சுகம் கண்டவரிடம்
பாதி சுகத்தில் பரித்துவிட்டால்
பரிதவிக்கும் அவர் உள்ளம்

           ***************

எல்லாம் தெரியும் என்று
இருமாந்திருப்பவரும்
எழுதி கூட்டி  பார்த்துப்
படிப்பதிலும் தப்பும்
தவறுமாய் படிக்கிறார்

          ****************

பிள்ளையார் கோவிலில்
உக்கி போட்டு
நெடுஞ்சான் கிடையாய்
விழுந்து கும்பிட்டு
பழகியதன் பலன்
தேர்தலில் தாய்
கட்சியில் சீட்டு.

           *****************

போலீஸ் DGP  வீட்டிலும்
செக்குயுரிட்டி அலாரம் ,
இன்டெர்னல்  செக்குயுரிட்டி
காமிரா
பாதுகாப்புக்காக

          ******************

வியாழன், 13 மார்ச், 2014

தோற்றம்

தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில்  ,
தொகுப்பாளர்கள் ஆணும் பெண்ணும்  .

பெண்களெல்லாம் நல்ல உடை உடுத்தி
தோற்றத்திலும் நேர்த்தியாய்
மலரும் வதனமாய் வளம் வர,

ஆண்கள் மட்டும் ,

கோணல் சட்டையும்,
கசங்கிய பேண்ட்டும் ,
தேவையில்லாத கோட்டும் ,
வாராத தலைமுடியும் ,
சேவ் செய்யாத முகமாக வந்து
கலவரப் படுத்துகிறார்கள் ,

ஏன் ? ஏன் ?

யார் சொன்னால்
மாற்றுவார்கள் !

செவ்வாய், 11 மார்ச், 2014

கண்ணே, கற்கண்டே !

கண்ணே, கற்கண்டே !

கொஞ்சும் விழித்திரை பார்த்தேன்.
நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன்.
மஞ்சம் நிறைந்திருந்தேன்.

தஞ்சம் என்றே கண்டேன் .
விஞ்சும் தமிழ்  கேட்டேன்.
கெஞ்சும் மொழி  தந்தேன் .

வஞ்சம் இல்லா முகம் தந்தாள் .
அஞ்சும் நடை பயின்றாள் .

அள்ளி அணைத்தேன்  ,
எனதருமை,
இரண்டு வயது மகளை !

(மகள் இல்லாத குறையை
மனத்தால் நிவர்திக்கின்றேன் )

குறும்புப் பா - 1


சூரையாடும் கூட்டத்தில்
சூரப் புலியாய் இருப்பதில்
என்ன பெருமை ?
     
         //////////////////////////////////////

தவறுகள் செய்தபோதும்
தண்டனை இல்லாதபோது
தவறுக்கு என்ன பெயர் ?

          ////////////////////////////////////

சுகவீனம் என்று மருத்துவ மனை
சென்று சுகம் கண்ட பின்
மருத்துவச் சிலவு பார்த்து
மறுபடியும் சுகவீ னமானால்
என்ன செய்வது ?

          /////////////////////////////////////

தன்  மகன் மருத்துவம் படிக்க
பெரும் பணம் கட்டி
படிக்கவைத்தார்
தன் வியாதி குணமாக
வெளி நாடு சென்று
மருத்துவம் பார்த்தார்

         ////////////////////////////////////////






திங்கள், 10 மார்ச், 2014

நிகழ்வுகள் மாற வேண்டும் .

ஒன்றல்ல இரண்டல்ல
குடும்பங்கள் உறவுகள்
ஒற்றுமை குறைந்து
திசைமாறிப்   போயின

சொத்தும் சுகமும்
நினைத்திருக்க
சொந்தம் மறந்திருக்க
என்  வசம் இருப்பதும்
எல்லாமும்  எனக்கு என்றே
மனக்கணக்கு போடுகிறார்

உடன் பிறந்தோரை 
நினைப்பதில்லை
உண்மை தெரிவதில்லை
சேர்த்து வைத்த காசெல்லாம்
செழுமை தருவதில்லை

நடுநிலை என்பது
நடுவீட்டில் மட்டும்
இருக்கும் காலம்
நிலையென்றால்
இல்லாது  போவது
எப்போது?

தெய்வத்தின் மீது
நம்பிக்கை
தினம் பார்க்கும்
நடவடிக்கை
தெளிவு கொடுக்க
மனம் மாற
நிகழ்வுகள்  மாற வேண்டும் .

(இன்று பல குடும்பங்களில்,   மூத்த சகோதரர் , சகோதரர்கள்,
உடன் பிறந்தவர்களுக்கு   கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் - அதனை கருத்தில் கொண்டு வடித்த வரிகள் ) 

வெள்ளி, 7 மார்ச், 2014

தேவலோகக் கன்னி

வயல் வரப்பின் ஓரத்திலே,
தையல் ஒருத்தி நடந்துவர,
சாயல் அறியக் கண்டேன்,
மையல் கொண்டே பின் சென்றேன்.

பையவே பையவே, நடக்கிறாள் ,
பார்த்து பார்த்து ,சிரிக்கிறாள்,
கண்கள், மலர மலர, பார்க்கிறாள்,
கை தட்டி தட்டி, இசை சேர்கிறாள்.

கால்,  கொலுசுகள் சிணுங்க,
கைவளையல்கள் , குலுங்க,
நீண்ட பின்னல்  உஞ்சலாட,
தாவணியை இழுத்துப்
பிடித்து நடக்கிறாள்.

கன்னக் குழி அழகும் ,
சிங்காரக் கண்ணழகும் ,
செம்பருத்தி இதழழகும்,
சேர்த்து வைத்துப் பார்க்கையிலே ,
சிந்தை முழுதும் கிரங்குதைய்யா !

சொக்கத் தங்க நிறத்திலே ,
போட்டிருக்கும் தங்கம் தெரியலே ,
கூப்பிடும் குரல் அறிய ,
அருகே செல்ல ,
குயிலோசையே கேட்குதைய்யா !
 
இவள் நடமாடும் நந்தவனம் ,
மனதிலே  நிற்கும் பிருந்தாவனம் ,
இதம் சேர்க்கும் சங்கராபரணம் ,
இவள் தேவலோகக்  கன்னியோ ?




புதன், 5 மார்ச், 2014

நல்லோர் வார்த்தை


உள்ளத்தால் உயர்ந்து ,
செயலில் சிறந்து,
உதவிடும் குணம் கொண்டு,
நலம் காப்பது ,
நல்லோர் வாழ்வு .

கோபம் என்ற போதும் ,
குறிப்பறிந்து தன்  நிலை காத்து ,
தகாத வார்த்தை தள்ளி ,
பொறுமை காப்பது ,
நல்லோர் குணம் .

பொறுமை தாண்டி,
குணம் தாண்டி,
தத்தளிக்கும் நேரத்தில்,
கொப்பளிக்கும் வார்த்தைகள்,
கொட்டித் தீர்த்தாலும்,
கேட்டவருக்கு ஒன்றும் ஆகாது.
நல்லோர் வார்த்தை தாக்காது.



செவ்வாய், 4 மார்ச், 2014

திரு கரு.வள்ளியப்ப செட்டியார் முத்து விழா வாழ்த்து.


பெரும் குணத்துச் செம்மல் ,
பிறையாயிரம் கண்ட அண்ணல் .
சிந்தனையும் சிரிப்பும் ,
தினம் கண்ட நல்ல உள்ளம் .

எம் தந்தையிடம் காட்டிய  அன்பு ,
தவறாமல் பிள்ளைகளிடமும் ,
காட்டியது  பெரும்  பேறு.
அதுவே உங்கள் சிறப்பு.

அழகு தமிழ் கவிதை ,
ஆனந்தமாய் படைக்கும் ,
ஆற்றல்,வித்தகம்  புரியும்
வித்தகர் .

குணப் பொருத்தம் ,
பெயர் பொருத்தம் ,
உடையவர் என்றே ,
ஊர் சொல்லும், உடையம்மை ஆச்சி .

அருமை மிகு பிள்ளைகள்,
பெருமை சேர்க்கும் செல்வங்கள்.
பொறுமை  காத்து,
நேர்மை கண்டவர்கள் .

ஆயா,அப்பத்தா ,ஐயா என்று
பேரன் பேத்திகள் கூடியிருந்து,
குதுகலிக்கும் நேரமிது,
குடும்பத்துச் சிறப்பு இது .

அலுவல் காரணமாய் ,
இங்கு இல்லா காரணத்தால் ,
வந்திருந்து வாழ்த்தினைப்,  
பெற இயலவில்லை .

நேரில் நிகழ்ச்சிக்கு ,
வராத போதும், 
நினைவில் நின்றது , 
நினைந்தது மனது ,
மலர்ந்தது மகிழ்ச்சி .

வரும் காலங்கள் ,
வளம் சேர்க்கட்டும் ,
நலம் கூடட்டும், 
நன்மை பெருகட்டும்.

அருமை பெருமையோடும் ,
ஆச்சியோடும் , அமர்ந்திருந்து ,
அகம்  மகிழ்ந்து, ஆசி நல்க, 
மனம் குளிர்ந்து கேட்கிறேன் .

வாழ்த்துங்கள் !
வளம்பெற ,
வாழ்த்துங்கள் !