என்னடி பெண்ணே, என்னடி பெண்ணே,
ஏனிப்படி இருக்கிறாய் !
சொல்லடி பெண்ணே, சொல்லடி பெண்ணே,
சொல்லவருவதை, சொல்லிவிடு!
கூறடி பெண்ணே, கூறடி பெண்ணே,
குறிப்பறிந்து, பேசிவிடு !
குற்றம் பார்க்காதே,
குறைகள் பேசாதே,
வாழ்கைச் சக்கரத்தில்,
சூட்சமங்கள் அதிகம் .
சாத்திரங்கள் அதிகம்.
சம்பிராதயங்கள் அதிகம்.
சார்ந்திருந்து வாழ்ந்து விடு !
இயல்பான வாழ்கை,
எற்றமுடன் பெற்று,
பொறுமை பேணி காத்து,
பேரிடர்கள் தவிடாக்கி ,
பெருமைகள் சேர்த்திடுவாய் .
ஆறடியில் அருமை இருக்கு .
அதனை அனுதினமும் நினைத்திடுவாய் .
ஓரடியில் பெயரும்
ஈரடியில் வாழ்வும்
மூன்றடியில் நினைவும்
நாலடியில் நலமும்
ஐந்தடியில் வளமும்
ஆறடியில் மண்ணும்
யாவும் பெற்று வாழ்வு சிறக்க
வாழ்ந்திடுவாய் !
(ஓரடி - ஒழுக்கம்.
ஈரடி - குறள் போற்றி வாழ்தல்.
மூன்றடி - அறம், பொருள்,இன்பம்.
நாலடி - நான்கு திசைகள்.
ஐந்தடி - ஐய்ந்து வகை நிலம்.
ஆறடி - வாழ்வின் முடிவு. )