செவ்வாய், 24 மார்ச், 2015

ஆசைகள்

பொன்னார் மேனியனைக் கண்ணாரக் காணவே ஆசை
தன்னார்வமாய் அவன் தாள்  பணியவே ஆசை
பண்ணோடு பதிகம் பாடி பரமன் புகழ் பேசவே ஆசை
மண்ணின் பெருமை  காத்து மாதவம் செய்திடவே ஆசை
கண்ணின் மணியாய் கருத்தாய் எண்ணம் நிறுத்திட ஆசை
வண்ண மலரெல்லாம் அடுக்கி அழகு பார்கவே ஆசை
உண்ணும்போதும் உறங்கும் போதும் உன்னினைவிலே இருக்க ஆசை
விண்ணில் தோன்றும் மதியாய் குறையில்லா நிறையாய் ஒளிரவே ஆசை
என்னில்   உன்னை நிறுத்தி நிறைவு பெறவே ஆசை
 எண்ணிலடங்கா  கருணைக் கடலே உந்தன் அருள் நித்தம் பெற்றிடவே ஆசை