வீராதி வீரனும் ,சூராதி சூரனும்,
இருக்கும் இடம் எங்கே என்று,
தெரியாமல் இருக்கும் நேரம் இப்போ!
பேசிய பேச்செல்லாம்,
தண்ணீரில் கரையவில்லை,
காற்றிலும் மறையவில்லை,
காணமல் போனது எங்கே!
சுற்றிச் சுற்றி ,கத்திக் கத்தி,
பேசி காசைக் கரியாக் கினார்.
போட்டகாசெல்லாம்,
பெருகி வருமென்றே,
பெருமிதத்தோடு காத்திருந்தார்.
உண்மையொன்று சொன்னாலும் ,
உள்ளம் அறிந்து சொன்னாலே ,
உன்னை ஏற்பர் .
உன்நிலை தெரியாமலே,
தன்நிலை அறியாமலே பிதற்றினால்,
உன்னை யார் ஏற்றுக்கொள்வார் !
வந்தவரும் ,வந்தது போதுமென்று ,
இருந்துவிட்டால், வந்தவழி ,
மாற்று வழியாகி குழியாகிவிடும் .
சேவை என்பதும், உழைப்பு என்பதும் ,
வெரும் வார்த்தையில் வேண்டாம்.
விருப்பமுடன் பணியாற்றி ,
மாற்றங்கள் தருவீர்.