புதன், 3 டிசம்பர், 2014

உன் தன்மை உனதருமை

உண்மை உணர்வோடு,
என்றும் நன்மை செய்து,
பொல்லாங்கு பேசமால்,
உதவிடும் மனம் கொண்டு,
இருந்திடும் காலத்திலும்,
இல்லாத போதும்,
பெயர் நிலைக்க  வாழ்ந்திடல் வேண்டும்.

வாழ்ந்த விதம் ,
வளைந்து போவதல்ல ,
வளர்ந்து சிறப்பதே .

சொல்லால் , செயலால் ,
பொருளால், பொறுமையால் ,
உதவிடுதல் வேண்டும்.
உன் தன்மை ,உனதருமை .

புவிதனிலே வாழ்ந்து சென்றவர்கள்
பெயரெல்லாம் நினைவிலுண்டா ?
நிலத்ததுண்டா ?

செயற்கரிய செயல் என்பதல்ல ,
சமூக நலம் காத்தல் ,
உதவிதனை உறுத்தாமல் செய்தல் ,
நினைவில் நிறுத்தும் ,
பெயர் நிலைபெறும்.