புதன், 30 ஏப்ரல், 2014

ஆறடி மண்



ஆடை ,அலங்காரங்கள்,
அரு மருந்து ,வாசனைத் திரவியங்கள் ,
அத்தனையும் எதற்கு ?

மேடையிலே, எதுகை, மோனையோடு
ஒன்றுக்கும், உதவாத ,உண்மைக்கு, மாறான
பேச்சும் எதற்கு ?

கூட்டாக நண்பர்கள் கூடியிருந்து,
கும்மாளம் போடுவதும் எதற்கு ?

கட்டுக்   கட்டாக பணம் காட்டி
பகட்டாக வாழ்வதும்  எதற்கு ?

ஒரு ஜான் வயிற்றிற்கு ,
இரு கை விரல்களும் ,
வாய் ஜால வார்த்தைகளும் ,
செய்யும் வித்தைகளும்  எதற்கு ?

கடைசியில்,
ஆறடி மண்ணும்
அருகிருந்து உன்னோடு
உடன் வாராது காண் .

  

சனி, 26 ஏப்ரல், 2014

நாம் தானே !


சொல்லாமல் போனாலும்
சோர்வாக இருந்தாலும்
இல்லாமல் போவதும்  நாம் தானே !

இருப்பதை விட்டு
இல்லாததை நினைத்து
ஏங்குவதும் நாம் தானே !

சுகம் என்று சொன்னாலும்
சோகம் என்று பார்த்தாலும்
உடன் படுவது நாம் தானே !

உயர்வுகள் ஒரு நிமிடம்
என்ற போது
எக்காளமிடுவதும்
தளர்வுகள் வந்த போது
தள்ளாடுவதும் நாம் தானே !

உறவுகள்  நினைக்க
உண்மைகள்  நிலைக்க
வரும் பொருள் காக்க
வளர்ந்தோங்கும் வாழ்வு சிறக்க
வரும் காலம் நலமென்றே
நமதென்றே பார்த்திருப்பது
காத்திருப்பதும் நயமாகும்.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா மதுரையிலே ,
எத்திசையும் மக்கள் கூட்டம் .

அழகர் பச்சை பட்டு டுத்தி குதிரை
வாகனத்தில்,
ஆற்றில் இறங்குகிறார் .

பக்தர்கள் பலரும் அழகர்
வேஷத்தில் ,
அலை மோதும் கூட்டத்தில்,
அவன் பெயர் சொல்லியே அழைக்கின்றார்.

தினம் காத்திடுவான், என்றே நினைக்கின்றார்.
மனம் ஒன்றி வணங்கிடுவோர்,
மலரும் வாழ்வு கண்டிடுவார் .
மறவாமல் தந்திடுவான்.

காத்திடுவான் உள்ளத்தை.
கலைந்திடுவான்   கள்ளத்தை .

அலை மோதும் கூட்டம் கண்டு ,
அழகருக்கு ஆனந்தம்.

வாழ்வு மலர ,வாக்கு மலர,
வாழும் பூமியும் மலர,
வணங்குவோம் அழகரையே !
ஆனந்தம் தந்திடுவான் .



திங்கள், 14 ஏப்ரல், 2014

ஜய ஆண்டு பேசுகிறது

ஜய ஆண்டு பேசுகிறது.

உடன் பிறந்தோர்
அறுபது பேர்,
பிள்ளைகள்
பன்னிரண்டு,
பேரப் பிள்ளைகள்
ஐம்பத்திரெண்டு ,
கொள்ளுப்  பேரன்
பேத்திகள்
மூன்னூற்றி அறுபத்து ஐய்ந்து.

உடன் பிறந்தாரிடையே
ஒற்றுமை உண்டு.
ஆண்டுக்கு ஒரு முறை
ஒருவருக்கு முன்னுரிமை.

எங்களுக்கு ஓய்வு இல்லை,
ஒழிவில்லை,
ஒழுங்காய் எங்கள்
தொழிலைச்  செய்கிறோம்.

மானிடர் செய்த மாற்றம்,
மாற்றி நடக்குது எல்லாம்.

மழை  இல்லை,
விளைச்சல் இல்லை,
விலை வாசி  வெருட்டுது என்று,
பழியெல்லாம் எங்கள் மேல்.

செய்வதை செய்யாமல்,
செய்யக் கூடாததை செய்துவிட்டு,
பொருமுவது எங்கள் மேல்.

மானிடரே மமதை விட்டு.
இயற்கையோடு இயந்து வாழுங்கள்,
இனிவரும் காலம் நலமாகட்டும்.

சித்திரை முதல் நாள், முதல்
என் ஆட்சி .
மங்கலமாய் ஜெயத்தை
மறுக்காமல் தருபவள் நான்.

என்  ஜய ஆண்டில்,
தமிழ்மகள் புகழ் மேலும்
பரவட்டும்.
தமிழ்மக்கள் சிறப்பு நிலை
சிறக்கட்டும்.
மகிழ்ச்சி எல்லையில்லாமல்
எங்கும் நிறையட்டும் .

என் பிறப்பில்,
எல்லோரும் உங்களுக்குள்,
புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல
புத்தாண்டாகிய நான்,
தமிழ்கூறும் நல்லுலகிற்கு,
புத்தாண்டு வாழ்த்துக் கூறி,
விடைபெறுகிறேன். 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் !


நாட்கள் ஓட ,
நாமும் ஓட,
வருஷம் ஒன்று முடிகிறது.

வரும் வருஷம்,
ஜய வருஷம் ,
பஞ்சாங்கம் நல்ல
செய்தி சொல்லுகிறது.

ஜகமெல்லாம்
நலமாக வேண்டும்
செழிப்பம் நிலைக்க வேண்டும்
நீர் நிலை மகிர வேண்டும்

உண்மை நிலைக்க
உறவுகள் நிலைக்க
பண்புகள் நிலைக்க
பாரதம் செழிக்க
ஜய  ஆண்டே வருக

புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி
நாம்  வரவேற்க 
புத்தாண்டு புகழ் மனம் சேர்க்கட்டும்
புதிய சிந்தனை மலரட்டும் .

புத்தாண்டு
வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் !

புதன், 2 ஏப்ரல், 2014

மழை வேண்டும்

மழை வேண்டும்
மழை வேண்டும் தாயே!

ஆறு குளம் கம்மாய் நிறைக்க
மழை வேண்டும்!

கழனி காடு செழிக்க
மழை வேண்டும்!

மண் வாசனை வர
மழை வேண்டாம்.
மனம் நிறைக்க
மழை வேண்டும்!

பெண்ணவள் கரு தரித்தால்,
பிள்ளயொன்று பிறக்குது .
மேகமது கருக்கொண்டு,
மழையது  கொட்டவேண்டும்.

நிலத்தடி நீரும் இல்லாமல்,
நீர்வளமும் இல்லாமல்,
நீர்பிடிப்பு இடமெல்லாம்,
நீக்கி விட்டோம்.

நிலமெல்லாம் துளைபோட்டு,
நீரெல்லாம் உரிஞ்சிவிட்டோம்.
நாளைக்கு நீரென்பது 
வெட்டி எடுக்கும் தங்கம்.
நீர் எடுக்க நிலம் வேண்டும்.

செடிகொடிகள் காயுது ,
பச்சைப் புல்லும் கருகுது ,
தவிக்கும் வாய்க்கும்  தண்ணீரும்,
காசு கொடுத்தாலே கிடைக்குது .,

வரப்பு வெட்டி வாய்க்கால் ,மாற்றி
வளம் கண்ட நாளெல்லாம்
ஏட்டில் மட்டுமே .

கயவர் சிலர் செயல் கண்டு
எங்கள் கண்ணிலும் கண்ணீர்
வற்றிவிட்டது .