ஞாயிறு, 19 ஜனவரி, 2014

தங்கத் தமிழ்

வாசமெல்லாம் மலருக்குச்  சொந்தமா ?
வளரும் பயிரெல்லாம் பூமிக்குச் சொந்தமா ?
தேனிருக்கும் பூவெல்லாம்  தேன் ஈக்கு  சொந்தமா?
திகட்டும் பாலிருக்க,
திகட்டாத தமிழிருக்க,
தேனினும் இனிய  தமிழ் யாருக்குச் சொந்தம் ?

தெள்ளு தமிழ் பாட்டால்,
தினம் தினம் சொல்லங்காரம் கண்டு,
கூடிடும் இளமையும்,
கூடும் சுவையும்,
கரை புரண்டோடும்,
காவியங்கள் ,காப்பியங்கள் ,
கண்ட சீரிளம் மொழியே ! 

மங்காத புகழும், மறவர் பெருமையோடு ,
மதித்து வாழும் நிலமே,
கொடுத்துச்  சிறக்கும்  மனமே,
தமிழர் என்ற இனமே,

சீரோங்கும்  தமிழும், 
சிறப்பொக்கும் மொழியும்,
பண்பாட்டு  படியும்,
தெளிந்த நல் அறிவும்,  
நாளும்  வளரும் நாடாம்,  
நாடு, தமிழ் நாடு.

தமிழ் நாட்டுத்  தமிழருக்கே,
சொந்தம் தங்கத் தமிழ்.