திங்கள், 3 பிப்ரவரி, 2014

என் கவலை



மனதில் உள்ள கவலை  சொல்லவேண்டும்,
யாரிடம் சொல்வது....

குணம் கொண்டோர் தேட,
இனம் காணமுடியவில்லை.

உறவு என்போர் இருக்க,
உண்மை இருக்கவில்லை .

நண்பர் உண்டு நாடலாம்,
நம்ப வில்லை என்னையும்.

மனைவியிடம் பேசலாம் ,
மறுக்குது மனசுமே.

பிள்ளைகளிடம் கேட்கலாம் ,
பின் விளைவை நினைக்குதே.

கோவில் சென்று சாமியிடம் உருகலாம் ,
கூட்டம்  நிக்க விடாமல்  தள்ளுதே.

தாடிச் சாமியாரிடம்  தயக்கம் என்ன,
என்றே சென்றேன்
அவர் தயங்கி தயங்கி புலம்புகிறார்
அவர் குறையை .