செவ்வாய், 10 ஜூன், 2014

தாபம்


கொஞ்ச வரும் நேரத்தில்
கெஞ்ச வைக்கும் நிலவே
நீ பருத்திக் காட்டில் பூத்த மலரோ
பண்ணைக் காட்டில் வளர்ந்த கொடியோ

எண்ணங்கள் ஆயிரம்
எடுத்துச் சொல்ல
அருகே வா என்றால்
தள்ளி நின்று கை சாடை செய்கிறாய்
வெள்ளரி பிஞ்சு விரலால்
பாவம் காட்டுகிறாய்

உன் கண்ணில் காதல் தெரியுது
கையும் காலும் காதல் மொழி பேசுது
கனவில் கண்ட காட்சிகள்
மனதில் வந்து நிற்குது

மலர்ந்த முகம் கொடுத்து
மஞ்சள் நிறம் அள்ளி தந்து
பள்ளிப் பருவத்து ஞாபகங்கள்
தள்ளி வைத்து விட்டு
தாலாட்டும் பாடல் பாடி விடு

உந்தன் அழகு மேனியிலே
அழகு குறிப்புக்கள்  எடுக்க வேண்டும்
அருகிருந்து  சுவைக்க வேண்டும்
அருமை விருந்து தர வேண்டும் .