வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா மதுரையிலே ,
எத்திசையும் மக்கள் கூட்டம் .

அழகர் பச்சை பட்டு டுத்தி குதிரை
வாகனத்தில்,
ஆற்றில் இறங்குகிறார் .

பக்தர்கள் பலரும் அழகர்
வேஷத்தில் ,
அலை மோதும் கூட்டத்தில்,
அவன் பெயர் சொல்லியே அழைக்கின்றார்.

தினம் காத்திடுவான், என்றே நினைக்கின்றார்.
மனம் ஒன்றி வணங்கிடுவோர்,
மலரும் வாழ்வு கண்டிடுவார் .
மறவாமல் தந்திடுவான்.

காத்திடுவான் உள்ளத்தை.
கலைந்திடுவான்   கள்ளத்தை .

அலை மோதும் கூட்டம் கண்டு ,
அழகருக்கு ஆனந்தம்.

வாழ்வு மலர ,வாக்கு மலர,
வாழும் பூமியும் மலர,
வணங்குவோம் அழகரையே !
ஆனந்தம் தந்திடுவான் .