செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கோபமும் ,கவலையும் ஒன்றே !

கோபமும் ,கவலையும் ஒன்றே !
உணர்ச்சியின் வெளிப்பாடு கோபம் .
உள்ளிருக்கும் நிலைப்பாடு கவலை .

உச்சத்தில் கத்துவதும் ,
கடுகடுவென  இருப்பதும் ,
தன்னிலை மாறுவதும் ,
மனித நேயம் மறப்பதும்,
வேகம் சேர்ப்பது கோபம் .

உணர்ச்சிதனை அடக்கி,
உண்மைதனை மறந்து ,
உள்ளத்துள் புழுங்கி ,
சோகம் சேர்ப்பது கவலை.

விஷயமில்லாமல் ,
விஷம் தோய்ந்து ,
பகை சேர்க்கும் ,
பலன் சேர்க்காது,
உடம்புதனை கேடாக்கும்  கோபம்  .

மனத்தை மலடாக்கி  ,
துக்கத்தை மேலாக்கி ,
துன்பத்தை பெரிதாக்கி ,
வாழ்க்கையை  சோர்வாக்கும்   கவலை  .

மணித்துளி பொருத்து,
மனதினில் நிறுத்தி ,
இருக்கும் நிலை மாற்றி ,
நிதானம் கொண்டால் ,
மாறிவிடும் கோபம்.
மறந்துவிடும் கோபம் .

மனம் விட்டு பேசி ,
அன்பு காட்டும் தோள் சாய்ந்து ,
நேசிக்கும் கரம் பற்றி ,
நடந்தவை நாளை மாறுமென்று
உறுதிகொண்டால்,
பறந்ததோடிடும் கவலை.
பக்கம் வாராது  கவலை .

எழுதுவது எளிது
எடுத்துச் சொல்வது சுலபம்
இருந்து பார்க்க வேண்டும்
முயன்று பார்த்தால் என்ன
 ஒருவராவது பயன் பெற்றால் நலமே