செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சப்தபதீ

  
சப்தபதீ - ஹிந்து திருமணங்களில் திருமாங்கல்யதாரணம் முடிந்தவுடன் மண மக்கள் அக்கினியை ஏழு முறை வலம் (சுற்றி ) வருவது சப்தபதீ.
ஏழு முறை வலம் (சுற்றுவது ) என்பது ஏழு அடிகளைக் குறிப்பதாகும்.ஏழு அடிகளின் உட்பொருள்,   

1. முதல் அடி : 
எனக்கு நீ, உனக்கு நான் - நாம் இருவரும் ஒன்றே என்று வாழ்வோம்.கருத்து வேறுபாடுகள் இன்றி நலமோடு வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

2. இரண்டாம் அடி:
கணவன் , மனைவி, இரண்டு உடலாக இருந்தாலும், ஒர் உயுராய் என்றும் இருப்போம்.உடலால், மனதால், இறையருள் துணை கொண்டு ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

3. மூன்றாம் அடி :
நம் குடும்பம்,நம் தாய்,தந்தையர் குடும்பம் என்று மூன்று  குடும்பமும் ஒன்றே
என்று பாகுபாடில்லாமல் வாழ்வோம். வாழ்வின் ஆதாரமாய் நேர்மையாய் பொருள் ஈட்டி, பெருக்கி , வளம் சிறக்க வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

4.நான்காம் அடி:  
அன்பு, பண்பு, பாரம்பரியம், விருந்தோம்பல் என்ற நான்கையும்   வாழ்கையில் கடை பிடித்து அறிவுப் பூர்வமாய் வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

5 .ஐந்தாம் அடி :
புலன்கள் ஐந்தும்அடக்கி, வாழ்வில்,நன்மக்களைப் பெற்று சிறப்பொடு வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

6. ஆறாம் அடி:
அரு சுவைகள் ஆறும் வாழ்வில் என்றும்  சுவைத்து,  மனம், மெய், வாக்கால் ஒற்றுமை காத்து வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

7. ஏழாம் அடி :
ஏழு பிறப்பிலும், நாம் இருவருமே, கணவன் மனைவி என்று பிரியாமல் வாழ வழி கூட்ட வேண்டுமென இறையருளை வணங்கி வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

திருமண நன் நாளிலே, நல்லவை நினைத்து,  தீயவை நீக்கி, மகிழ்ச்சி நிறைந்த நல் வாழ்வு அமைய வேண்டி, நல்லருள் வழங்க, அன்னையவள் மீனாட்சி பாதம் பணிவோம் .