சனி, 30 மே, 2015


        

                    தெலுக் இந்தான் தெண்டாயுதபாணி முருகன் 



துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 


அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 


துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்


உத்திராட்சமும்பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 


காலமெல்லாம் காத்திடும் வேலன் - தெலுக் இந்தான் 

தெண்டாயுதபாணி முருகன் .



மனசு ,

வயிறு  நிறைந்தவுடன், போதும்
என்று நினைக்கிற  மனசு ,
பொருள் நிறைந்து இருக்கும்  போதும் ,
போதாதுன்னு  ஏன் மாறுபட்டு நிக்குது ?

கோடி கோடியாய் குவிந்தபோதும் ,
கூடவருவது ஏதுமுண்டோ ?

கூட இருப்போர் நலம் காத்து
குணம் காப்பது நலமா ?
குழி பறிப்பது தகுமா ?

பட்டும், பீதாம்பரமும்,
பகட்டும் பாரினில் இருக்கும் வரையே !

கயமை செய்யாமை ,காயங்கள் தாராது.
பெருமை சேர்ப்பது, பொறுமை காப்பதே!

எனக்கு மட்டும் என்பது ஆணவம்.
கூடி  இருப்பது கோடி சேர்க்கும் ஆவணம்.

உண்மைகள் உயர்வானால் ,
உரிமைகள் நிலையாகும் .










பந்தயம்

வாழ்க்கையில் நீ சந்திக்கும் இடர்கள் - பந்தயம் .
கலங்காமல் எதிர்கொண்டால் - கண்ணியம் .
கடவுள் துணை நின்றால்  - புண்ணியம்

அது என்ன நியதி .

உன் முன்னோர்களிடமிருந்து உனக்கு நோய் -
அது பரம்பரை வியாதி .

உன் முன்னோர்களின் நல்ல குணங்கள் ,
உனக்கு வரவில்லையே ,
அது என்ன நியதி .