ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பாடகர் உன்னி கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து



பாடகர் உன்னி கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து
'மனம் உருகும் அற்புத கானங்கள் பாடிய இனிய பாடகர், முதல் திரைப்பாடல்களின் மூலமே விருதுகள் குவித்த உன்னி கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று..

நாள் முழுவதும் இன்றைய நட்சத்திரம் பகுதியில் உன்னி கிருஷ்ணன் பாடிய இனிய பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்

Happy Birthday @[53664508646:274:Unnikrishnan]'
இனிய முகம்
சிரிப்பைத் தந்திடும் பார்வை
தேன் சுவைக் குரல்
சுகம் தந்திடும் கானங்கள்
அற்புத மெல்லிசைப் பாடல்கள்
இவையனைத்தும் உந்தன் சொந்தம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
குரலும், இனிமையும் மாறாதிருக்க வேண்டும்
இன்று மட்டுமல்ல உன் பிறந்த நாள்
என்றைக்கும் பாராட்டு மழை
ஆக உனக்கு தினம் பிறந்த நாள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வளராமல் குழந்தையாகவே இருந்திருந்தால் நலம் என்ற கவிதைக்குப் பதில்





வளராமல் இருந்திருந்தால்.......

தாய் மனம் தளர்வு கண்டிருக்கும்,
தந்தை மனம் கலங்கியிருக்கும்
தங்கையும்,தம்பியும் சோர்ந்தேயிருப்பர்,
பாட்டியும், பாட்டனும் பரிதவித்திருப்பார்கள்,
நண்பன் என்று ஒருவன் இல்லாமலே போயிருக்கும்.

வளராமல் இருக்க வரம் வேண்டாம்
எங்கும் வளம் கூட வரம் பெற்று வருவோம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்........மறைவிற்கு ..


மெல்லிசையில் இமயம்
அடக்கத்தில் இமயம்
உயர்வு கண்ட போதும்
கர்வம் காட்டாத உன்னதம்
நடந்து வந்த பாதை 
மறக்காத நேர்மை
பட்டி தொட்டிக்கெல்லாம்
பாடல் தந்த நாதம்
மறைவு உந்தன் உடல் கண்டது
இசையுள்ளவு தங்கள் உயிர் இருக்கும்
உங்கள் புகழ் நிலைக்கும்.

திருமதி சுந்தரேசன் சம்பந்தம் அவர்களின் அறுபது நிறைவிற்கு திரு சுந்தரேசன் எழுதியிருந்த கவிதைக்கு வாழ்த்துக் கவிதை




வயது அறுபது
அருமை பெருமை தெரிந்த வயது
அனுபவம் பெரிதும் காட்டும் முதிர்வு
உள்ளன்பு உயர்வாய் பண்பின் தெளிவாய்
தன்னலம் கடந்த சிறப்பு
அதுவே பெண்மையின் உயர்வு

சிறப்புக்கள் சிகரம் தொட வேண்டும்
உறவுகள் உள்ளம் மகிழ வேண்டும்
உன்னதம் உங்கள் மொழியாக வேண்டும்
வளரட்டும் வாழ்க்கை உயரங்கள்.
வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

காசி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அவர்களின் அறுபது நிறைவு விழாவிற்கு வாழ்த்து



அடக்கமாய் அன்பாய்
அனுதினமும் சிறப்பாய்
சிரித்த முகத்துடன் 
வலம் வரும் உத்தம 
குலத்துதித்த அருமை நண்பர்.

ஆச்சியோடமர்ந்து அறுபது
காணும் மகிழ்வு
பிள்ளைகள் அறுபது
விழாக்களையும்
காணவேண்டும் பெற்றோர்.

இறைப்பணி, சமுகப்பணி
என்று நாளும் தொண்டாற்றும்
உண்மைச் சிறப்பு.

உயர்வுகள் பல உங்களை
நாடி வர வேண்டும்
நலம் யாவும் பெற்று
சிறக்க வேண்டும்
உள்ளன்போடு வேண்டுகிறேன்
உலகாலும் சொக்கேசன்
பாதம் பணிகின்றேன்.

வாழ்த்துக்கள்.

பெருமை மிகுந்த போற்றுதலுக்குரிய மா மனிதர் மேதகு அப்துல் கலாம் மறைவு ..........

பெருமை மிகுந்த போற்றுதலுக்குரிய மா மனிதர் மேதகு
அப்துல் கலாம் மறைவு ..........

இந்திய தீபகற்பத்தின் தென் கிழக்கு பகுதியாம்
இராமேஸ்வரத்தில் பிறந்து
வடகிழக்கு பகுதி மேகாலயாவில் மறைவு கண்ட
இந்தியாவின் ஒப்பற்ற குடிமகனே!
மேகங்களின் ஆலயத்தில் உனக்கோர் ஒய்வு.
எளிமையாய் வாழ்ந்து காட்டி
எட்டாத உயரங்களை எட்டிய பெருமகனே!
இருந்த போது இளைஞர்களை உன் வசப்படுத்தீனாய்
காட்டிய வழியில் வளம் கண்டோம்.
வளம் தந்து தாய்நாட்டின் உயர்வு கண்டாய்,
உந்தன் மறைவு,
மறக்க முடியாத மறைவு,
நிரப்ப முடியாத நிறைவு.

நண்பர் சுந்தரேசன் சம்பந்தம் ,மறைந்த திரு அப்துல் கலாம் அவர்கட்க்கு தெரிவித்த கண்ணீர் அஞ்சலிக்கு தெரிவித்தகருத்து




மனதில் தைத்த வார்த்தைகள்.
எண்ணத்திற்கு வடிவம் வார்த்தைகள்.
எடுத்துச் சொன்ன விதம் ,
இழந்த இழப்பை இரட்டிப்பாக்குகிறது
மரணம் என்பது தவிர்க்க முடியாதது
தருணம் என்பதே கவலை தருவது.
உயரம் என்றால் இமயம்.
உன்னதம். என்றால் கலாம்
மானிடம் கண்டறியா உன்னதம்.
மகான்கள் வாழ்க்கையைப் படித்ததுண்டு
மகானைப் பார்த்துவிட்டோம்
அதுவே நாம் கண்ட பெரும் பேறு.

ஹரி தியாகராஜன் பிறந்த நாள் வாழ்த்து - 02.08.2015


பாரம்பரியம் நிறைந்த குடும்பத்தின்,
பண்பு நிறைந்த பிள்ளை,
அன்பு காட்டிடும் பிள்ள,
குணம் காத்திடும் பிள்ளை,
குடும்பப்பெரியவர்களின் ,
சிறப்பெல்லாம் தனதாக்கிக்கொண்ட பிள்ளை.

பிறந்த நாள் காணும் இந்நாளிலும்,
இனி வரும் நாட்களிலும்,
சிறப்புக்கள் பெருகி வர வேண்டும்.
பொறுப்புக்கள் நாடி வர வேண்டும்.
மகிழ்ச்சி மனதில் நிலையாக வேண்டும்.
உளமாற வாழ்த்துகிறேன்,
உயர்வுகள் என்றும் உனதென்றே வாழ்த்துகின்றேன்.