வெள்ளி, 30 ஜனவரி, 2015

புண்ணியம் விதைத்து விடு.

உள்ளத்துள் ஈசனை வைத்திடு ,
உணர்ந்திடு நாளும் நலமே !
உயர்திடுவாய்,  உன்னதம் பெற்றிடுவாய் !

கள்ளமில்லா உள்ளம்,
கடவுளுக்குச் சமம் என்பேன் !
கவனமாய் செய்திடும் பணிகளெல்லாம் ,
கடவுளுக்கு படையலென்பேன் !

சொல்லில் ,பணிவு வேண்டும் .
அன்பு காட்டும் , செயல் வேண்டும் .
பசித்திருப்போருக்கு ,பகிர்ந்து கொடுத்திடல் வேண்டும்.

உதவிடும் ,உன் செயல் ,
நீ ,நட்டுவைக்கும் புண்ணிய விதையாகும் !
நாளைய ,உன் சந்ததிகளின் பெரு   வாழ்வு ,
இன்றே நன்றே காண்பாய் !

விட்டுப் போகவேண்டாம் ,
சொத்தும் , பணமும், நகையும் ,
புண்ணியம் விதைத்து விடு.!