வளம் கொழிக்கும் பினாங்கு நகரில், நகரத்தார்
நலம் காத்திடும் தண்ணீர் மலையான் !
வெள்ளி ரதத்தில் பவனி வரும் அழகோ பேரழகு!
துள்ளி வரும் காவடியும் ,தவழ்ந்து வரும் நடையழகும்,
தை பூச நன் நாளில், காண்போர் இல்லமெல்லாம்
குடிகொண்டுருப்பான் தண்ணீர் மலையான் !
பதைபதைக்கும் மனதிற்கும் ,
தவமிருந்து வேண்டிடும் சுகத்திற்கும்,
அண்டிவரும் அடியாருக்கும்,
ஆனந்தம் தந்திடுவான் தண்ணீர் மலையான் !
சீனர்களின் பக்தியும் , சிதறிடும் தேங்காயும்
கூடிடும் மக்கள் கூட்டமும்,
ஓம் என்ற பிரணவமும், ஓம்கார நாதமும்,
தமிழ் வேதம் தந்த நாதனின் கருணையல்லவா!
பினாங்கு நகர் வாழும் தண்ணீர் மலையானின்
அருள் அல்லவா !
நித்தமும் பக்தியாய் வணங்கிட்டோர்,
புத்தியில் நிறைந்திட்ட தன்னிகரில்லா,
தண்ணீர் மலையான் தாள் பணிவோம்
வளம் யாவும் பெறுவோம்.