சனி, 12 ஜூலை, 2014

கற்றவை, பற்றவை



அறிவு தருவது ,
அ றம் வளர்ப்பது ,
அன்பு காப்பது  ,
அதுவே  கல்வி.

கற்றவை கடுகளவே ,
கற்றவை காத்திடும்,
கற்றவை நிலைத்திடும் ,
கற்றவை உயர்த்திடும் .

தரம் பிரித்து ,
தகுதி வளர்த்து ,
தரணியில் சிறந்திடு ,
தந்திடும் கற்றவை.

 உன்னால் உதவி ,
ஊருக்கு நலமே .
கொடுப்பது தர்மம் ,
காத்திடும் தலைமுறை.
தூண்டுதலே பற்றவை .

விளக்கு ஒன்று ,
ஏற்றலாம் பல .
சாற்றிடும் மந்திரம்,
போற்றிடும் வித்தைகள் ,
மாற்றிடும் பாதைகள் ,
தருவதோ தூண்டுதல்.

கை  காட்டுதல் ,
காசு கொடுத்தல்,
நிலைக்காது என்றும் .
நிலையான செயல்,
கொடித்திடு  அறிவை .
குறையாது உனக்கு,
கொண்டாடிடுவர் தினமும்.