சனி, 29 அக்டோபர், 2011

நல்வாழ்வுக்கு ஒரு நல்ல வழி

நல்வாழ்வுக்கு ஒரு நல்ல வழி.(சோமசுந்தரம் அருணாசலம் )

மருந்தில்லா மருத்துவம் ஒன்றுண்டு 
பாரினிலே பலரும் மறந்தார் இன்று, 
தாதா, பாட்டி சொன்னதை, செய்ததை 
மறவாமல் கடைபிடித்திருந்தால் 
நோயற்ற வாழ்வு பெறலாம். 
இனியாவது கடைபிடிப்போம், வாரீர் !

நாளின் முதல் உணவே மதியம் என்று கொள்வோம்  
இடையே பசி வந்தால் பழம் மட்டுமே உண்போம். 

நீரழிவு நோய் உள்ளோரும், 
பச்சை காய்கறிகள் அதிகம் சேர்த்து, 
சமைத்த உணவு கொள்வோம் .

அந்திசாயும் நேரம் (சூரியன் மறையும் நேரம்),
அடுத்த வேளை உண்ணும் உணவாய் கொள்வோம். 
அதனையே அந்நாளின் கடைசி வேளை உணவு என்று மாற்றுவோம். 

பச்சை காய்கறிகளும், பழங்களும்அதிகம் உணவிலே சேர்த்தால்,
அண்டாது நோய்கள் .  

பாலும், தயிரும், மோரும், வேண்டாம் ,
மிருகத்திலுருந்து கிடைப்பவை அனைத்தும் வேண்டாமே!

சுத்திகரிக்கப்பட்ட எண்ணையும், உப்பும் ,
செயற்கை இனிப்பும் (சீனி) வேண்டாம் 
அத்தனையும் தவிர்ப்போம், தள்ளிவைப்போம்.

 கடைபிடித்தால்,  பெரும் பயன் தான் என்ன என்று கேட்பீர் ?
நோய் அற்ற வாழ்க்கை பெறலாம்,
கெட்ட கொழுப்பு இல்லாமலே போகுமே !

முயற்சி செய்வோம், முயன்றவர்கள் கண்டு சொன்ன உண்மை, 
பலன் அதிகம். அருமை மருந்து, எளிமை மருந்து,
செலவில்லா மருத்துவம்.
எளிமை உணவு ,இயற்கை உணவு. 

வள்ளலாரும், அண்ணல் காந்தியடிகளும், காஞ்சி பெரியவரும் 
சொன்ன வார்த்தை , வாழ்ந்த வாழ்க்கை .

நலமான வாழ்க்கை நாம் பெறவே, நல்ல முறையான உணவு பழக்கத்தைப் பழகுவோம்.

வாழ்க , வளர்க , நலம் பல மலர்க .