சனி, 22 பிப்ரவரி, 2014

கடவுளுக்கு இணை


பாசுரங்கள் ,ஆயிரம் பாடி ,
பக்தியில் பரவசம் பெறுவதும் ,
முக்தி பெறுவதில், முதலாய் இருப்பதும் ,
புத்தியில் நிலை நிறுத்தி ,
சக்தி காத்து அருள் தர,
ஆண்டவன் பாதம் சரண் புகுவதும் ,
அவரவர் மனம் கண்ட, அருள் நிலையாகும்.

கண் கண்ட அவலம் ,
கடுகளவே ஆனாலும்,
சிறிதளவும் சிந்தியாமல்,
உன்கரம் நீட்டி உதவுதல்,
உன்னத நிலையாகும் .
உயர்வு என்பது, உன் செயலாகும்.
கண்ணால் கண்டதே ,
கடவுளுக்கு இணையாகும் .

காலங்கள் மாறலாம் ,
காட்சிகள் மாறலாம் ,
கண்ணியம் தவறாமல் ,
காப்பது கடமையென்று,
தவறுகள் புரியாமல் ,
காலம் தோறும் ,
இருந்து பார்த்தால்,
இருப்பதே சுகமாகும்.
இறைவனுக்கு நிகராகும் .