திங்கள், 27 ஏப்ரல், 2015

ராமநாதன் தம்பி சுப்ரமணியன் இல்ல புதுமனை புகு விழா வாழ்த்து (நாள் 30.04.2015)


திரு .மு .சுப்ரமணியன் இல்ல புதுமனை புகு விழா வாழ்த்து 
 (நாள் 30.04.2015)

பெற்றோரை நினைவில் நிறுத்தி ,
தந்தை பெயரில் இல்லம் கண்டு ,
சிந்தை மகிழ்ந்திடும் நேரமிது .
மனையென்னும் மங்கலம் ,
காணும் சிறப்பது கொத்தமங்கலம் .
சுகம் தந்திடும் நினைவிது .

உறவுகள், சுற்றம் சூழ்ந்து ,வாழ்த்த
புதுமனை புகு விழா நிகழ்வுகள் ,
அருமை ,பெருமையோடு
சிறக்க வேண்டுமென ,
அருங்குணத்து நாயகி ,
அன்னையவள் மீனாட்சி
பெருங்குணத்து சொக்கேசன் ,
இருவர் பாதம் பணிந்து வணங்குகின்றேன்.

அன்புநிறை ,சுப்ரமணியன் தம்பதிகள் ,
நலம் யாவும் பெற்று ,வளம் சேர்த்து ,
குலம் சிறக்க வேண்டுமென,
மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.