வெள்ளி, 28 நவம்பர், 2014

புது வசந்தம்


பணிவான சொல் வேண்டும், 
பகட்டான வாழ்வு வேண்டாம் . 

நேரான பார்வை வேண்டும் , 
நிலை தடுமாறும் செயல் வேண்டாம். 

உண்மை பேசிடல் வேண்டும் , 
புறம் கூறித் திரிதல் வேண்டாம் . 

சுகம் மனதினில் வரித்திடல் வேண்டும், 
சோகம் மனதாலும் நினைத்திடல் வேண்டாம் . 

உழைப்பின் உன்னதம் உணர்ந்திடல் வேண்டும், 
பலன் கருதி பாசாங்கு செய்திடல் வேண்டாம் . 

உதவிடும் எண்ணம் வேண்டும், 
பெருமை பெற நினைத்திட வேண்டாம். 

இவை நினைவில் கொண்டு வாழ்ந்து பார்த்து விடு, 
புது வசந்தம் வாழ்க்கையில் நிலைத்துவிடும் .