எட்டி நின்று பார்த்தவுடனே,
கட்டிடம் கட்டியது,
யார் என்று கேட்கச் சொல்லும்.
அருகே சென்றவுடன், கட்டியது யார்
என்று தெரிந்துவிடும்.
ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகிருக்கும்,
ஒரு கதையிருக்கும்.
நுழை வாயில் கதவுத் தூண் ஒரு அழகு,
நிலை வாசல் கதவு ஒரு அழகு,
சன்னல்கள் அழகு,
சன்னல் கம்பிகளும் அழகு,
மாடங்கள் அழகு,
மாடிப்படிகளும் அழகு,
கட்டிடங்களுக்கு அழகு சேர்த்த பேராசான்.
எண்ணத் தொலயாத வடிவங்கள்,
அத்தனையும் கண்ணில் பட்டவுடன்,
நயம் சேர்க்கும் கட்டிடமாய் உருவாகிவிடும் .
வசிக்கும் வீடு என்றில்லை,
வாசிக்கும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் அழகு சேர்த்தாய்,
வாழ்வளிக்கும தொழிற் கூடங்களுக்கும் அழகு சேர்த்தாய்.
கலை நயம் மிக்க கட்டிடங்கள் மட்டும் நங்கள் பார்கவில்லை,
மரத்திலே மண்டபங்கள்,
சுதையிலே சிற்பங்கள்,
விதானத்திலே விதவிதமாய் வடிவங்கள்,
ஒன்றுபோல் ஒன்றில்லை,
ஒவ்வொன்றும் வேறுவேறாய்,
அத்தனையும் அழகு.
கண் கண்டது கருத்திலே உருவாகும்,
கலைமிகு பொருளாய் உருமாறும்.
கற்கோவில்கள் கண்டவரிடையே,
கற்பிக்கும் கோவில்களும் தந்தவர்.
கலை தந்தை நீ என்று சொல்லுவார்,
கலை தந்தை மட்டுமல்ல,
கல்விக்கும் தந்தை , தொழிலுக்கும் தந்தை,
எண்ணிலார் வாழ்வு கொடுத்த செம்மல்.
நாங்கள் வளர உங்கள் ஆசி வேண்டும்.
அனுதினமும் உங்கள் நினைவை போற்றி,
வணங்குகின்றோம்.
(சோமசுந்தரம் அருணாசலம் )