வெள்ளி, 25 ஜூலை, 2014

மனம் மலராகும்

உடல் அழுக்கு வெளியேற
வாய்கள் ஒன்பது உண்டு

மன அழுக்கு வெளியேற
வழி தான் உண்டா ?
முறை தான் என்ன?

ஒன்பது வாசல்கள் வேண்டாம்
உயர்வான எண்ணம் ஒன்று போதும்

நிதர்சனத்தின் நிகரென்று
நிம்மதியாய்  வழியுண்டு

உதவிடும் எண்ணம்
உடன் செய்திடல் 

ஊருக்கு உழைத்திடல்
உண்மை பேசிடல்

நன்மை செய்திடல்
தவறேதும் செய்யாதிருத்தல்

உன் வழி இதுவென்றால்
உனக்கு நிகர் எவருண்டு

மனம் மலராகும்
இருந்து பார்
வாழ்ந்து பார்
இழப்பது ஒன்றுமில்லை

வியாழன், 24 ஜூலை, 2014

என் மனதில் ஒரு கேள்வி

தோட்டத்தில் நடை பயிற்சி
நடக்கின்ற போது  கண்ட காட்சி
கட்டெறும்பு இரண்டு
இரண்டு மட்டும்  செல்ல
ஒன்றின் தடம் மாறாமல்
மற்றொன்று அதனை இணைந்து
பிணைந்து செல்ல
என்  மனதில் ஒரு கேள்வி
கட்டெறும்பு இரண்டும்
கணவன் மனைவியா?
காதலன் காதலியா?
அண்ணன் தம்பியா?
அக்கா  தங்கையா?
அண்ணன்  தங்கையா?  

வெள்ளி, 18 ஜூலை, 2014

எண்களுக்காண தமிழ் எழுத்துக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள

எண்களுக்காண  தமிழ் எழுத்துக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள

1.   -        ------       ஒரு    டையில்

2.   -    உ  -----  இரண்டு றவினர்கள்

3.   -    ங்  -------  மூன்று  சங்கிலிகள்

4.   -     ச  ------  நான்கு   லங்கை

5.   -     ரூ -----   ஐந்து   ரூபாய்க்கு

6.   -     சு ------   ஆக      சுத்தமாய் 

7.   -     -------  எது எது  ப்படியோ 

8.   -        -------அது அது  ப்படியே

9.   -     கூ ------ வாங்கி கூத்தாடினார்கள்



சனி, 12 ஜூலை, 2014

கற்றவை, பற்றவை



அறிவு தருவது ,
அ றம் வளர்ப்பது ,
அன்பு காப்பது  ,
அதுவே  கல்வி.

கற்றவை கடுகளவே ,
கற்றவை காத்திடும்,
கற்றவை நிலைத்திடும் ,
கற்றவை உயர்த்திடும் .

தரம் பிரித்து ,
தகுதி வளர்த்து ,
தரணியில் சிறந்திடு ,
தந்திடும் கற்றவை.

 உன்னால் உதவி ,
ஊருக்கு நலமே .
கொடுப்பது தர்மம் ,
காத்திடும் தலைமுறை.
தூண்டுதலே பற்றவை .

விளக்கு ஒன்று ,
ஏற்றலாம் பல .
சாற்றிடும் மந்திரம்,
போற்றிடும் வித்தைகள் ,
மாற்றிடும் பாதைகள் ,
தருவதோ தூண்டுதல்.

கை  காட்டுதல் ,
காசு கொடுத்தல்,
நிலைக்காது என்றும் .
நிலையான செயல்,
கொடித்திடு  அறிவை .
குறையாது உனக்கு,
கொண்டாடிடுவர் தினமும்.














வியாழன், 10 ஜூலை, 2014

வாழ்க்கை நியதி -2



காலம் எனும் கண்ணாடி
காட்டும்  காட்சி
மாறாதது மனசாட்சி
பெற்றதும் உற்றதும்
மாறிவிடும் வீழ்ச்சி

நல் நினைவு  உன் மனம்
நினைக்கட்டும் தினம்
மலரட்டும் மகிழ்ச்சி
தளரட்டும் அயர்ச்சி

உற்றவர்கள் உயர்ந்து
உரியவர்கள் நிமிர்ந்து
பகை என்பது பரிசானால்
தொகை யறிந்து நடந்தால்
முறையாகும் பாதை .

வேரோடு வெட்டிச் சாய்த்த போதும்
ஈரமென்ற வீரம் சேர்த்து
வெற்றி என்ற உறுதி  நினைத்து
பெற்றிடல் வேண்டும்
துளிர்க்கும் ஆர்வம் .

பரிகாசங்கள் தேடி வர
பாசாங்குகள் நாடி வர
உண்மை  காட்டி
பண்பு நிறுத்தி
பொறுமை பேணல்
சாற்றிடுமே குணம் .







ஞாயிறு, 6 ஜூலை, 2014

பால் வியாபாரம்

பால் மாடு இல்லாமலே,
பால் வியாபாரம் நடுக்குது.
வியாபாரம் சோராய் நடக்குது .

கொள்முதல் குறைவு,
கொடுப்பதோ அதிகம்.
நூறு லிட்டர் பால் வாங்கி,
இரநூறு  லிட்டர் வியாபாரம்.

பாலில் நீர் ஊற்றி காய்ச்சுவதும் ,
பாலில் தண்ணீர் ஊற்றித் தருவதும் ,
சிரமம் குறைக்கும் செயல். 
செய்வது கலப்படமல்ல,
சமூக சேவை.

கொழுப்பில்லாத பால் குடியென்குது,
மருத்துவம்.
நீர் ஊற்றிய பால் கொழுப்பு நீக்கப் பட்டது ,
என்பது எங்கள் தர்க்கம்  .

விலையென்று பார்த்தால்
வெறும் தண்ணீருக்கு
கொடுக்கும் காசை விட
பாலும் சேர்வதால்
பாதகமில்லை என்றே நினைப்பீர் .






வாழ்க்கை நியதி


கேடுடையோர் செல்வம் ,
பரிதவிக்கும் நேரத்தில்,
பயனின்றி போய்விடும் .

நிர்ணயமில்லா வாழ்க்கை ,
நிர்மூலமாய் ஆகிவிடுதல்
நியதி .

ஒப்புக்கு உபசாரமும் ,
உதவாத கையும் , உன்
தேவைக்கு உதவாது.

அன்பெனும் வாக்கும் ,
பண்பெனும் செயலும் ,
குணமெனும் குன்றேற்றி,
கொடுத்துதவும் பொருள் தந்து ,
கோடான கோடி நலம் சேர்க்கும் .

கோபம் குறைத்து ,
குணம் நிறைத்து,
பயம் அகற்றி ,
பண்பு காத்து ,
பணிவோடு இருத்தல் ,
மேன்மக்கள் செயல்.






சனி, 5 ஜூலை, 2014

கை பேசி



இதயம் அருகே இடம் பிடிக்கிறாய்  
தொட்டு தொட்டுப் பார்த்தே   மகிழ்கிறார்  
தடவிக் கொடுத்தால்  உயிர் பெறுகிறாய்
உயிரில்லாத போதும் உணர்வாகிறாய்
உணர்வில்லாத போது மௌனமாகிறாய்

காதோரம் உனை அணைத்து
காலம் மறந்து கதை பேசுகிறார்
மணிக் கணக்காய்ப்  பேசி
மனசை இழக்கிறார்
காசும் கரைவது அறியாமல் இருக்கிறார்

பிறப்போடு நீயும் ஒரு உறுப்பாய்
இருக்கும் காலம் அதி தூரமில்லை
கை  பேசியே உன்  வளர்ச்சி
பயமாய் இருக்கிறது.

கந்தன்


நிம்மதி பெருக 
சிந்தனை சுருக்கி 
நிந்தனை மடக்கி 
வேதனைகள் மறைய 
சோதனைகள் கடந்து 
உந்தனை கந்தனிடம் 
சேர்ந்து விடு 
உன்வாழ்வு வளமாகிடும் 


கோபுரங்கள்


ஆலயக் கோபுரங்களைக் 
கண்ட கண்கள்
இப்போது
எங்கெங்கு திரும்பினும்
அலை பேசி கோபுரங்களைக்
காணுகின்றன .

ஆலயக் கோபுரங்களைப்  
புறாவும் குருவியும்
தங்கும் இடமாக்கும் 

அலை  பேசி கோபுரங்களைப்
புறாவும் குருவியும்
புறக்கணித்தே விட்டோடும்

கோபுர தரிசனம்
கோடிப் புண்ணியம்
ஆலயக் கோபுரங்கள்
கையெடுத்துக் கும்பிட
அலைபேசிக் கோபுரங்களைப்
அண்ணாந்து பார்ப் பாரும் இலர்

கண்ணிற்கு குளிர்ச்சியும்
செவி வழி  இசையின் வளர்ச்சியும்
ஆலயக் கோபுரங்கள் தந்தன .
கதிர் வீச்சு சுழற்சியும்
மாசும் தளர்ச்சியும்
மாறாமல் தருவது
அலை  பேசிக் கோபுரங்கள்.


பெற்றெடுத்த உனக்கு நாளை .

பாமரரும்   ,கிராமத்தாரும்,
பண்பு மாறவில்லை,
மனசு மறக்கவில்லை,
மறந்தும் செய்யவில்லை.

படித்தவரும்,பட்டினவாசியும்,
அவசியமென  நினைக்கின்றார்.
பெருமையோடு செய்கின்றார்.

தன் வசதி மட்டும் கருதி,
தாய் தந்தை வயது காட்டி,
தள்ளாடும், தடுமாறும், காலத்தில்
பெற்றோரை,
முதியோர் இல்லங்களில்
அடைகின்றார் .

பணம் மட்டும் கட்டி விட்டால்
பாசம் என்ன ,
கடைச் சரக்கா  வாங்கிவிட!

ஏங்குது உள்ளம்,
எதிர்பார்ப்பது ஒரு  வார்த்தை.
கொஞ்ச நினைப்பது,
பேரப்பிள்ளைகளை.

உயிர் கொடுத்து,
கல்வி கொடுத்து,
உடனிருந்து உயர்த்தியது,
உன் பெற்றோர்.
உண்மை தெரிந்தும்,
உயர்வு அறியவில்லை.

பெற்றோருக்கு இன்று ,
பெற்றெடுத்த  உனக்கு நாளை .
உன் பிள்ளை உடனிருந்து
உன்னை கவனிக்கிறான் .