ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வாழ்க்கையின் பலம்

பிறப்பது ,பெருமையல்ல ,
பிறந்த பிறப்பு ,அருமை கருதி
அருமை காத்து ,சிறப்பு பெறுவதே
பெருமை.

வாழ்க்கையின் நலம் ,
நல்லவன் என்பதும் ,
வாழ்க்கையின் சுகம் ,
பிறர்க்கு உதவுவதும் ,
வாழ்க்கையின் பலம் ,
நேர்மை பேணுவதாகும்.

பணமும் ,வசதியும் ,
வரும் போகும்.
நிம்மதி பெற ,
நினைத்திடவேண்டும் ,
உனக்கும் கீழே ,
ஆயிரம் கோடி .

பணமும் ,வசதியும் ,
வரும் போகும்.
நின்று காத்திட ,
செய்திடவேண்டும்,
நிலையான தர்மங்கள் பல .