வியாழன், 19 ஜூன், 2014

நித்திலத்தில் நிரந்தரம்

நித்திலத்தில் நிரந்தரம்  என்றும் உண்டா ?
நிறங்களில் வெறுமை கண்டதுண்டா?
புற்கள் பூமணம் தந்ததுண்டா?
சொர்க்கம் புவியில் பார்த்ததுண்டா?

உறவுகள் மாறாமல் நிலைத்ததுண்டா ?
மறக்கமால் தவறுகள் நடந்ததுண்டா  ?
சிறகுகளின்றி பறவை பறந்ததுண்டா?
தருக்களின்றி மண் சிறந்ததுண்டா?

ஆடம்பரம் சிறப்பு கண்டதுண்டா ?
ஆவேசம் போற்றப் பட்டதுண்டா  ?
அன்புக்கு அவனியில் மாற்று உண்டா?
பண்புக்கு பாரினிலே தேசமுண்டா?

பாரம்பரியம் நிலை தாழ்ந்ததுண்டா ?
பாசாங்கு செய்வோர் நிம்மதி பெற்றதுண்டா ?
பாசமில்லாமல் உயரினங்கள் வாழ்ந்ததுண்டா?
பிறந்தவர்கள் மரிக்காமல் இருந்ததுண்டா ?