வெள்ளி, 27 ஜூன், 2014

ஆகாயம் ,காற்று,நெருப்பு,நீர்,பூமி .

ஆகாயம் ,காற்று,நெருப்பு,நீர்,பூமி .

வெட்ட வெளி வானத்தில்
எல்லையில்லா பரப்பு
எத்திசையும் ஒரு குணம் காட்ட
அண்டசரா சரத்தின்  வெளிவாசல்
ஒளிந்து கிடப்பது ஓராயிரம்
அதுவே ஆகாயம் .

காற்று எனும் கடுங் கோபக்காரி
நதியோடு விளையாடி நட்புப்பேன
மலையரசன் நடு நின்று  நலம் காக்க
வீசு தென்றலென வலம் வந்தாள்

பொறியென விதை வளர்த்து
சுடரென வெளிக்காட்டி
சுகங்கள் உள்ளடக்கி
உயிரதன்  உண்மையில் ஒளிந்து
உயிர் காப்பதும் நீர்ப்பதும் நெருப்பே !

நீர்நிலயாம் நதிப் பெண்ணவள்,
ஆவியென மாறி ,
ஆகாய வானரசனுடன் கலந்து, கூடி ,
பெற்றெடுத்தாள் மண் குளிர ,
மழைப் பெண்மகளை !


கூறு போட்டு கொத்திக் கிளறி
பிளந்து கொடுமைகள் பல புரிந்தும்
அத்தனையும் அவதரிக்க
அருமருந்தாய் அவதனிக்க
பொருத்து பொறுமை காப்பவள்
பூமித் தாய் !