சனி, 25 ஏப்ரல், 2015

அவளே என் தமிழ்மகள்.

நித்தில வானில்
முழு நிலவு நாளில்
கைத்தலம் பற்ற
கனவு கண்டேன்
கனவினில் வந்தவள்
காரிருள் நிறத்தவள்
கசங்கிடா மனத்தவள்
காட்சிக்கு எளியவள்
தருவது அவள் சுகம்
பெறுவது என் தாகம்
ஏட்டினில்  சேவை
பாட்டினில் பரவசம்
அறிவுத் தடாகம்
செறிவுறு செல்வி
அவளே என்  தமிழ்மகள்.