திங்கள், 12 அக்டோபர், 2015

கடவுள்



கடவுள் என்று தனியொருவருமில்லை ,
உணரும் காலம் வருவதுமில்லை ,
வாய்ப்பு வந்தபோதும் நினைப்பதுமில்லை,

உண்மையாய் இருப்பதும் ,
உதவிடும் எண்ணமும் ,
அன்பெனும் ஆதரவும் ,
உயர்வின் உயரல்லவா !
கடவுளை
உணரும் உணரல்லவா !

வியாழன், 1 அக்டோபர், 2015

என் அழகே !


கன்னக் குழியில் நகை காட்டு
காது மடலில் நிறம் காட்டு
அன்னம் போல் நடை காட்டு
வண்ண நிலவில் முகம் காட்டு

மன்னன் மார்பில் மல்லிகை சூட்டு
மயக்கம் தள்ள பஞ்சனை நீட்டு
தயக்கம் தள்ளி சுகம் கூட்டு
பக்கம் வந்து இதம் காட்டு

ஒப்பனைகள் உனக்கெதற்கு
ஒளிந்திருக்கும் அழகெல்லாம்
மறைப்பது சரியாகுமா
மலரெல்லாம் உனக்கு ஈடாகுமா

தேன் தரும் சுவை
மான் மருளும் பார்வை
வான் விரிக்கும் உல்லாசம்
அத்தனையும் நீயே !நீயே !