தெரிந்து கொள்வோம்
மலரிலிருக்கும், தேன் சேர்க்கும், வண்டு
மகரந்தமும், உடன் கொண்டு செல்லும் .
மறு மலரில் அமர ,மகரந்த சேர்கை நடக்கும் .
இதுவன்றோ பிரதி பலன் கருதா உதவி. .
பழத்தினை ஈன்ற தரு சுவைப்பதில்லை
காய்ப்பது தன் கடமை என்று நினைப்பதில்லை,
கொடுப்பது சுகம் என்று சொல்வதில்லை
இதுவன்றோ உண்மை தர்மம்.
உணவு கண்டவுடன் கூடிடும் எறும்புக் கூட்டம்
கூட்டில் உணவுதனைச் சேர்ப்பதில் ஒழுங்கு
சோர்வறியா உழைப்பில் நேர்மை ,
இதுவன்றோ சிறப்பான கூட்டு வாழ்க்கை .
மலரிலிருக்கும், தேன் சேர்க்கும், வண்டு
மகரந்தமும், உடன் கொண்டு செல்லும் .
மறு மலரில் அமர ,மகரந்த சேர்கை நடக்கும் .
இதுவன்றோ பிரதி பலன் கருதா உதவி. .
பழத்தினை ஈன்ற தரு சுவைப்பதில்லை
காய்ப்பது தன் கடமை என்று நினைப்பதில்லை,
கொடுப்பது சுகம் என்று சொல்வதில்லை
இதுவன்றோ உண்மை தர்மம்.
உணவு கண்டவுடன் கூடிடும் எறும்புக் கூட்டம்
கூட்டில் உணவுதனைச் சேர்ப்பதில் ஒழுங்கு
சோர்வறியா உழைப்பில் நேர்மை ,
இதுவன்றோ சிறப்பான கூட்டு வாழ்க்கை .