என் பயணம்
விழியோரம் வழியும் கண்ணீர்
மழைத் தூரல் மறைத்திடும்
தனி ஆளாய் நான் போகும் பாதை
சரியென்றே மனம் சொன்ன நேர்மை
உறவுகள் நோகடிக்க
உண்மைகள் உறங்கிக் கிடக்க
உயர்வுகள் ஒழிந்திருக்க
பொறுமையே சரி என்று
ஒதுங்கிப் போகிறேன்
செல்வமும் செழிப்பும் பார்தரிந்தேன்
பணமே பிரதானம் என்பாரின்
பண்பாடும் உடன் அறிந்தேன்
புறம் பேசி வரம் கொடுக்கும் வள்ளல்கள்
விழியோரம் வழியும் கண்ணீர்
மழைத் தூரல் மறைத்திடும்
தனி ஆளாய் நான் போகும் பாதை
சரியென்றே மனம் சொன்ன நேர்மை
உறவுகள் நோகடிக்க
உண்மைகள் உறங்கிக் கிடக்க
உயர்வுகள் ஒழிந்திருக்க
பொறுமையே சரி என்று
ஒதுங்கிப் போகிறேன்
செல்வமும் செழிப்பும் பார்தரிந்தேன்
பணமே பிரதானம் என்பாரின்
பண்பாடும் உடன் அறிந்தேன்
புறம் பேசி வரம் கொடுக்கும் வள்ளல்கள்
வாழும் விதம் நான் அறிவேன்
அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
தமிழன் சொன்ன வேதம்
எல்லாம் தனக்கில்லை பிறர்க்கே
என்பது அவரவர் சொல்லும் பாடம்
உண்மைக்கு உயர்வுண்டு
உயர்வுக்கு வழியுண்டு