செவ்வாய், 2 டிசம்பர், 2014

என் பயணம்

என்  பயணம்
விழியோரம் வழியும் கண்ணீர்
மழைத் தூரல் மறைத்திடும்
தனி ஆளாய் நான் போகும் பாதை
சரியென்றே மனம் சொன்ன நேர்மை

உறவுகள் நோகடிக்க
உண்மைகள் உறங்கிக் கிடக்க
உயர்வுகள் ஒழிந்திருக்க
பொறுமையே சரி என்று
ஒதுங்கிப் போகிறேன்

செல்வமும் செழிப்பும் பார்தரிந்தேன்
பணமே பிரதானம் என்பாரின்
பண்பாடும் உடன் அறிந்தேன்
புறம் பேசி வரம் கொடுக்கும் வள்ளல்கள்
வாழும் விதம் நான் அறிவேன் 

அரசன் அன்றே கொல்வான் 
தெய்வம் நின்று கொல்லும் 
தமிழன் சொன்ன வேதம் 
எல்லாம் தனக்கில்லை பிறர்க்கே 
என்பது அவரவர்  சொல்லும் பாடம் 

உண்மைக்கு உயர்வுண்டு 
உயர்வுக்கு வழியுண்டு 



சிறப்பின் சிறப்பு


ஓவியத்தின் தனித்தன்மை
ஓவியனின் உன்னதம்

காவியத்தின் தனிச் சிறப்பு
கதை தரும் கருத்து

சிலையின் முழு அழகு
சிற்பியின்  கை வண்ணம்

படைப்பின் ரகசியம்
பரவசத்தின் உச்சம்

எண்ணங்களின் கோர்வை
எழுத்தின் பிறப்பு

மன்னிக்கத் தெரிந்த மனசு
மறுக்கமுடியா உன்னதம்

மழலை தரும் மகிழ்ச்சி
வற்றாத ஜீவநதி