சனி, 29 அக்டோபர், 2011

நல்வாழ்வுக்கு ஒரு நல்ல வழி

நல்வாழ்வுக்கு ஒரு நல்ல வழி.(சோமசுந்தரம் அருணாசலம் )

மருந்தில்லா மருத்துவம் ஒன்றுண்டு 
பாரினிலே பலரும் மறந்தார் இன்று, 
தாதா, பாட்டி சொன்னதை, செய்ததை 
மறவாமல் கடைபிடித்திருந்தால் 
நோயற்ற வாழ்வு பெறலாம். 
இனியாவது கடைபிடிப்போம், வாரீர் !

நாளின் முதல் உணவே மதியம் என்று கொள்வோம்  
இடையே பசி வந்தால் பழம் மட்டுமே உண்போம். 

நீரழிவு நோய் உள்ளோரும், 
பச்சை காய்கறிகள் அதிகம் சேர்த்து, 
சமைத்த உணவு கொள்வோம் .

அந்திசாயும் நேரம் (சூரியன் மறையும் நேரம்),
அடுத்த வேளை உண்ணும் உணவாய் கொள்வோம். 
அதனையே அந்நாளின் கடைசி வேளை உணவு என்று மாற்றுவோம். 

பச்சை காய்கறிகளும், பழங்களும்அதிகம் உணவிலே சேர்த்தால்,
அண்டாது நோய்கள் .  

பாலும், தயிரும், மோரும், வேண்டாம் ,
மிருகத்திலுருந்து கிடைப்பவை அனைத்தும் வேண்டாமே!

சுத்திகரிக்கப்பட்ட எண்ணையும், உப்பும் ,
செயற்கை இனிப்பும் (சீனி) வேண்டாம் 
அத்தனையும் தவிர்ப்போம், தள்ளிவைப்போம்.

 கடைபிடித்தால்,  பெரும் பயன் தான் என்ன என்று கேட்பீர் ?
நோய் அற்ற வாழ்க்கை பெறலாம்,
கெட்ட கொழுப்பு இல்லாமலே போகுமே !

முயற்சி செய்வோம், முயன்றவர்கள் கண்டு சொன்ன உண்மை, 
பலன் அதிகம். அருமை மருந்து, எளிமை மருந்து,
செலவில்லா மருத்துவம்.
எளிமை உணவு ,இயற்கை உணவு. 

வள்ளலாரும், அண்ணல் காந்தியடிகளும், காஞ்சி பெரியவரும் 
சொன்ன வார்த்தை , வாழ்ந்த வாழ்க்கை .

நலமான வாழ்க்கை நாம் பெறவே, நல்ல முறையான உணவு பழக்கத்தைப் பழகுவோம்.

வாழ்க , வளர்க , நலம் பல மலர்க .        
         
        

வியாழன், 27 அக்டோபர், 2011

பேரா தெண்டாயுதபாணி கோவில் உற்சவரின் சிறப்பு .

உற்சவரைப் பார்த்தவுடன் உயர்வு தந்திடும் கந்தன்    
துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 
அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 
துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்
உத்திராட்சமும், பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 
காலமெல்லாம் காத்திடும் வேலன் -பேரா தெண்டாயுதபாணி முருகன் .

கல்வி வியாபாரம்


கற்பிப்பதோ கல்வி
கறப்பதோ பணம்
கல்வி - தர்மம் என்றார்
காசு கொடுத்து தர்மம் செய்வோரிடையே
காசு பெற்று தர்மம் செய்கின்றார் இங்கே
அனுமதியோடு கொள்ளை
யாரிடம் சொல்வது
கடவுளிடம் சொல்லலாம் என்றால்
கடவுளைப் பார்பதற்கும் காசு
இறைவனே ! நீயே பேசு

புதன், 19 அக்டோபர், 2011


ஒருவர் திறமையை ஒருவர் .ஊக்குவித்து 
ஒருவர் கவலையில் ஒருவர் பங்குகொண்டு
ஒருவர் குறையை ஒருவர் பொறுத்து 
ஒருவர் துன்பத்தில் ஒருவர் ஆறுதல் அளித்து
ஒருவர் முயற்சியில் ஒருவர் ஒத்துழைத்து
ஒருவர் கோபத்தில் ஒருவர் அமைதி காத்து
ஒருவர் சுதந்திரத்தை ஒருவர் அங்கிகரித்து
வாழ்வதே 
இல்லறம் இன்னிக்க சிறக்க சிறந்த வழி
(ஆக்கம்- திரு மீனாக்ஷி சுந்தரம் சோமய்யா,புதுவயல்)           


சப்தபதீ மந்திரத்தின் உட் கருத்தே, தாங்கள் குறிப்பிட்டுள்ள அருமையான கருத்துக்கள். நம் நகரத்தார் திருமணங்களில், தங்கள் அருமையான வாசகங்களை, மணமக்கள் மனமொன்றி சொல்லவேண்டும். நாளும் கடை பிடிக்க வேண்டும்.வாழ்கையில் மகிழ்ச்சி ததும்பும்          

கண்ணதாசன்


கண்ணதாசன் 
கவி தந்த ஆசான்
கவிதைக்கு ஈசன்
கண்ணதாசன் 
படிப்பறிவும் பட்டறிவும் 
தமிழறிவு ஆனதாலே 
தலை நிமிர்ந்து நின்றார் 
எழுதாத பொருளில்லை 
சொல்லாத தத்துவமும் இல்லை 
மனம் திறந்த பேச்சு 
மறைக்கத் தெரியாத மனசு
மறைந்தும் இன்றும் என்றும்   
வாழ்கின்றார் மக்கள் மனதினிலே  

கோலாலம்பூர் செந்தூல் தெண்டாயுதபாணி சுவாமி



அலை கடலுக்கு அப்பாலே 
களையான முகத்தோடு 
அலைபாயும் மனதையும்
நிலை நிறுத்தி காத்திடும் 
மலை நாட்டு செந்தூலில் குடிகொண்டிருக்கும் 
தெண்டாயுதபாணி கடவுள். 
அந்தமில்லா ஆனந்தன்   
வந்த வினையும் வருகின்ற எந்த வினையும் 
நல் வினையாக்கிடும்
முருகக் கடவுள் 

ஜாதகம் பார்க்க வேண்டாம்


பார்காமலே, முகம் பார்க்காமலே கல்யாணம்    
ஆயாவுக்கும் ,ஐயாவுக்கும்  ! 

பார்த்து, பார்த்து குணம் பார்த்து, வகை பார்த்து கல்யாணம்  
ஆத்தாவுக்கும் , அப்பச்சிக்கும் !  

இவர்களுக்கு,

சிறப்பாயிருந்தது வாழ்க்கை   
செழிப்பாயிருந்தது வாழ்க்கை 

மகிழ்ச்சி கூடியது 
சந்ததிகள் கூடியது 

ஜாதகம் பார்க்கவில்லை 
நட்சத்திரம் பார்க்கவில்லை 
குறையொன்றும் காணவில்லை 

காலம் மாறியது, 

ஜோசியம் பார்த்தால் சோதனை குறையும் என்றார் ஐயர் !
சோகம் கூடியது , வெளியே யாரும் சொன்னதமில்லை !

மணம் கூட மனப் பொருத்தம் போதும் என்றால்
கேட்பார் யாருமில்லை, 

கஷ்டங்கள் கூடியது -

சோசியர் சொல்வதெல்லாம் பலிக்கும் என்றே, 
அவர் வீட்டு வாசலிலே தினமும் தவம் கிடக்கிறார். 

சோசியர்கள் பை நிறைக்க, 
அவர் வார்த்தைக்கெல்லாம் செவி மடுக்கிறார்.

ராகு, கேது , சனி , செவ்வாய் கட்டம் என்று சொல்லி, 
நம் ம(ன)ணம் கெடுக்கிறார்.

பரிகாரம் என்ற பெயரால் பணம் பறிக்கிறார்,
பெற்றோர் ஒன்றும் புரியாமல் மனம் பதைக்கிறார்.

வைசியருக்கும், சத்திரையருக்கும், 
ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றால்,
சோசியர் என் பிழைப்பு என்னாகும் என்கிறார்,

கட்டம் 12 , ராசி 12 ,நட்சத்திரம் 27 ,
தெரிந்திருந்தால் எல்லாம் அறிந்த சோசியர்.
சொன்னது நடக்கும் எனபார்
அவர் வீட்டில் மாற்றி நடந்ததை யார் அறிவார்?

நல்ல குணம் கொண்டு வாழ்வோம் 
நிறை கண்டு மகிழ்வோம் 
மனம் பார்த்து மணம் முடிப்போம்