ஆச்சிமார்களின் சேமிப்பும், சிக்கனுமும்
சாமான்களாக உருமாறுகின்றன.
தாயிலுருந்து மகள், மகளிருந்து மகள் என்று
பெயர் மாறுகின்றன.
வைத்தது, பார்க்காமலே, புழங்காமலே,
வீடு மாறுகின்றன.
பெண் குழந்தை பிறந்துவிட்டாலே,
பெண்ணும் வளருவாள்.
சாமான்களும் வளரும்.
வசதி அதிகம் உள்ளவரிடையே,
வாய்ப்பும் அதிகம்,
வாங்குவதும் அதிகம்.
வைப்பதும் அதிகம்.
சாமான்கள் வைக்கவேண்டுமா?
தேவைதானா ? என்று கேட்டால்,
பலசமயம் அவை பலருக்கு
உதவியதுண்டு.
உள்ளவர்கள் கொடுப்போம்.
கொடுப்பதாலே நிறைவதுமில்லை,
கொண்டு வருவதாலே குறையொன்றுமில்லை.
கட்டாயப்படுத்தி வாங்குவதே தவறு என்பேன்.