வியாழன், 10 ஜூலை, 2014

வாழ்க்கை நியதி -2



காலம் எனும் கண்ணாடி
காட்டும்  காட்சி
மாறாதது மனசாட்சி
பெற்றதும் உற்றதும்
மாறிவிடும் வீழ்ச்சி

நல் நினைவு  உன் மனம்
நினைக்கட்டும் தினம்
மலரட்டும் மகிழ்ச்சி
தளரட்டும் அயர்ச்சி

உற்றவர்கள் உயர்ந்து
உரியவர்கள் நிமிர்ந்து
பகை என்பது பரிசானால்
தொகை யறிந்து நடந்தால்
முறையாகும் பாதை .

வேரோடு வெட்டிச் சாய்த்த போதும்
ஈரமென்ற வீரம் சேர்த்து
வெற்றி என்ற உறுதி  நினைத்து
பெற்றிடல் வேண்டும்
துளிர்க்கும் ஆர்வம் .

பரிகாசங்கள் தேடி வர
பாசாங்குகள் நாடி வர
உண்மை  காட்டி
பண்பு நிறுத்தி
பொறுமை பேணல்
சாற்றிடுமே குணம் .