திரவியங்கள் குவிந்தபோதும்,
செல்வங்கள் சேர்ந்தபோதும்,
பதவிகள் நிறைந்தபோதும்,
கொடுத்தவன் அவனிருக்க ,
கொண்டுவந்தவன் " நான் "என்று
நினையாதே .
"நான்" அழித்து நலம் சேர்த்தால்,
நன்மைகள் பலகூடும்.
வெருண்டபோதும்
மருண்டபோதும்
மலையெனவே அவன் பால்
சரண் புகுந்தால்
மனமிரங்கி வந்திடுவான்
கேட்டவரம் தந்திடுவான்
அரற்றி அழுதபோதும்
அன்பு கொண்டோர்
விலகிச் சென்றபோதும்
அவன் தாள் பணிந்தால்
சஞ்சலமெல்லாம் நீக்கிடுவான்