புதன், 11 ஜூன், 2014

எழுத்துத் தளம்

அறிமுகம் இல்லை ,
கண்ணிருந்தும் பார்க்கவில்லை,
காதிருந்தும் குரல் கேட்கவில்லை ,
ஆனால் நண்பர்கள் ,
எண்ணிக்கையோ நாற்பத்தி  நான்கு -
எழுத்துத் தளம் தந்த வெகுமதி .

மொழி படித்தேன்.
கவிதைகள்  படித்தேன் .
தமிழ் வளர்த்துக்கொண்டேன்.

காதல் உண்டு .
கற்பனை உண்டு .
சிந்தனை உண்டு .

எட்டாத நிலையும் ,
தொட்டுப் பார்க்காத
பொருளும் ,
சமூகச் சீண்டலும்,
கேள்வியும் பதிலும் ,
நகையும் சுவையும் ,
கருத்தான கட்டுரையும் ,
அருமை கண்டு ,
நேரம் போக்குவதில்,
நிம்மதி பெற்றேன்.
அறியாதன அறிந்து கொண்டேன் . 

தேர்வுகள் முக்கியமில்லை .
பரிசுகள் அவசியமில்லை .
எழுதுவது என்  கவனம் .
பண்பு காப்பது என் தனம் .
உண்மைக்கு உயர்வுண்டு.
தரத்திற்கு பரிசுண்டு .

எழுத்துத்  தளம் தரும் சுகம் ,
தினம் படித்து மகிழுது மனம்.


குறும்புப் பா


 வெளியிடத்தில்
ஆணும் பெண்ணும்
கட்டிப் பிடித்தால் -

அது

கலாச்சாரக் கெடுதல்
பாலியியல் பலாத்காரம்
      ------
திரையரங்கில்
கூட்டம் கூட்டி
ஆணும் பெண்ணும்
கட்டி உருள்வதை
திரையில் காட்டினால்  -

அது

சினிமா , கலை ரசனை.




குறுக்கு வழி வேண்டாம்


தொந்தரவுகள் நிறைந்த உலகம்,
மந்திரங்களால் மாறுமென்றால்,
மடங்களெல்லாம்,  மறுபிறப்பெடுக்கும்.
காவி வேட்டி கடை சிறக்கும் .

தந்திரங்கள் செய்வோரும்,
சாஸ்திரங்கள் பேசுவோரும்,
தனிக்கட்சி ஆரம்பித்து,
தலைவராகி விடுவர்.

உழைப்பின் உன்னதத்தை
உணராமல், ஊர் சுற்றி
வருவதே தொழில் என்பார்.
உண்மைக்கும், நன்மைக்கும் ,
உதவாது கேடு நினைப்பர் .

உடம்பு வளர்த்து, உயிர் வளர்த்து,
கை உயர்த்தி ,காரியம் செய்து ,
காசு பணம் பரித்து, கயமை புரிவது
எங்கள் கடமை என்பார் .

நன்மை பணிந்து, நயம் பயந்து ,
கண்ணியம் காத்து ,
கொடுப்பதில் சிறந்து ,
மதிப்பு பெறுவதே சிறப்பு.

குறுக்கு வழி நாடாமல்,
குற்றம் புரியாமல் ,
எற்றம் பெற்று ,
உள்ளம் மகிழ்ந்து, உயர்வோம்.