வெள்ளி, 15 ஜூன், 2012

வாழ்க்கை



காணும் கனவுகளெல்லாம் காட்சியாகிவிட்டால் 
கடவுளை நினைப்பார் யார் ?
உள்ளம் சொல்லும் உண்மையை 
உலகறியச் சொல்லிவிட்டால் 
நீயே உன்னதமானவன் .
கடவுள் என்று சொல்லி காமம் பழகுவோரிடயே
கயவன் என்று பழிக்கப்பட்டவன் மேலானவன் .
எண்ணம் மேலானால் 
வாழ்வு மேலாகும் 
வாழ்க்கையிலே இன்பம் என்பதும் துன்பம் என்பதும் 
இரவும் பகலும் போலாகும் 
இன்பம் மட்டும் வேண்டுமென்றால் இயற்கை ஏற்காது 
துன்பம் என்றும் நிரந்தரமில்லை .
வரும் காலம் நிச்சயம் என்றால் 
நாளைய விடியல் மகிழ்ச்சி தரும் 
என்பதும் நிச்சயமே.