புதன், 5 மார்ச், 2014

நல்லோர் வார்த்தை


உள்ளத்தால் உயர்ந்து ,
செயலில் சிறந்து,
உதவிடும் குணம் கொண்டு,
நலம் காப்பது ,
நல்லோர் வாழ்வு .

கோபம் என்ற போதும் ,
குறிப்பறிந்து தன்  நிலை காத்து ,
தகாத வார்த்தை தள்ளி ,
பொறுமை காப்பது ,
நல்லோர் குணம் .

பொறுமை தாண்டி,
குணம் தாண்டி,
தத்தளிக்கும் நேரத்தில்,
கொப்பளிக்கும் வார்த்தைகள்,
கொட்டித் தீர்த்தாலும்,
கேட்டவருக்கு ஒன்றும் ஆகாது.
நல்லோர் வார்த்தை தாக்காது.