திரும்பிய பக்கமெல்லாம்,
அநியாயம், அவலக் காட்சிகள் .
ஏன் இப்படி என்று கேட்டால் ,
இதை மாற்ற உன் முயற்சி
என்ன என்கிறார் ?
என் நிலையும்,
எழுத்தறிவித்தவன்
நிலையும், ஒன்றே
என்றேன் .
எழுத்தறிவித்தவன்,
சொல்லிக் கொடுத்தபின் ,
என்னை நினைப்பதில்லை,
கூட வருவதில்லை .
நானும் அவலக் காட்சிகள் ,
பார்த்த பின் அதைப்
பற்றி நினைப்பதில்லை .