ஞாயிறு, 16 மார்ச், 2014

இன்றைய உலகம்



திரும்பிய பக்கமெல்லாம்,
அநியாயம்,  அவலக் காட்சிகள் .

ஏன் இப்படி என்று கேட்டால் ,
இதை மாற்ற உன் முயற்சி
என்ன என்கிறார் ?

என் நிலையும், 
எழுத்தறிவித்தவன்
நிலையும், ஒன்றே
என்றேன் .

எழுத்தறிவித்தவன்,
சொல்லிக் கொடுத்தபின் ,
என்னை நினைப்பதில்லை,
கூட வருவதில்லை .

நானும்  அவலக் காட்சிகள் ,
பார்த்த பின் அதைப்
பற்றி நினைப்பதில்லை .

குறும்பு பா -2


பதவி சுகம் கண்டவரிடம்
பாதி சுகத்தில் பரித்துவிட்டால்
பரிதவிக்கும் அவர் உள்ளம்

           ***************

எல்லாம் தெரியும் என்று
இருமாந்திருப்பவரும்
எழுதி கூட்டி  பார்த்துப்
படிப்பதிலும் தப்பும்
தவறுமாய் படிக்கிறார்

          ****************

பிள்ளையார் கோவிலில்
உக்கி போட்டு
நெடுஞ்சான் கிடையாய்
விழுந்து கும்பிட்டு
பழகியதன் பலன்
தேர்தலில் தாய்
கட்சியில் சீட்டு.

           *****************

போலீஸ் DGP  வீட்டிலும்
செக்குயுரிட்டி அலாரம் ,
இன்டெர்னல்  செக்குயுரிட்டி
காமிரா
பாதுகாப்புக்காக

          ******************