இதயம் அருகே இடம் பிடிக்கிறாய்
தொட்டு தொட்டுப் பார்த்தே மகிழ்கிறார்
தடவிக் கொடுத்தால் உயிர் பெறுகிறாய்
உயிரில்லாத போதும் உணர்வாகிறாய்
உணர்வில்லாத போது மௌனமாகிறாய்
காதோரம் உனை அணைத்து
காலம் மறந்து கதை பேசுகிறார்
மணிக் கணக்காய்ப் பேசி
மனசை இழக்கிறார்
காசும் கரைவது அறியாமல் இருக்கிறார்
பிறப்போடு நீயும் ஒரு உறுப்பாய்
இருக்கும் காலம் அதி தூரமில்லை
கை பேசியே உன் வளர்ச்சி
பயமாய் இருக்கிறது.