திங்கள், 8 டிசம்பர், 2014

உடம்பைப் பேணிடு .

ஓடி ஓடி ஓய்வில்லாமல் உழைக்கிறான்,
காசு பணம் சேர்ப்பதிலே குறியாய் இருக்கிறான் ,
சொத்து சுகம் பார்க்கிறான்,
சொந்த சுகம் நினைக்கலை!

காசு பணம் வந்துச்சு,
கஷ்டமெல்லாம் போச்சுதா ?
கவலையெல்லாம் தீர்ந்துச்சா?
உடம்பிலே சீக்கு வந்து சேர்ந்தது தான் மிச்சம் !

உடம்பை பாக்கமலே காசு சேத்தவன்,
சேத்த  காசு இப்ப சீக்கப் போக்கவே சிலவாகுது!
சீக்கும் வேண்டாம் ,சிலவும் வேண்டாம்,
தேவைக்கு உழைத்திடு.

சிக்கனமாய் இருந்திடு.
உடம்பைப் பேணிடு .
உயர்வாய்  வாழ்ந்திடு .

வியாழன், 4 டிசம்பர், 2014

மாமன் மகள்

மாமன் மகள்

வெட்ட வெளி தனில்
பற்றவைக்கும் வெயில்தனில்
சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாய்
கிட்ட  நெருங்க ஆசை கொண்டேன்
ஒதுங்கி ஒதுங்கியே நீ சென்றாய்

மாந்தோப்பு நிழல் அருமை என்றேன்
மருங்கும் நேரம் மயக்கும் பார்வை தந்தாய்
மாலை நேரம் வரக் காத்திருக்க
மன்மத நேரம் கூடிவர
மறக்காமல் வந்து  விடு
குறையாமல்  சுகம் தந்து விடு

மாமன் மகள் நீ
மஞ்சங் கிழங்கு நீ
பெருவது நான்
தருவது நீ
காத்திருப்பேன் கல்யாணக் காலம் வரை.







புதன், 3 டிசம்பர், 2014

உன் தன்மை உனதருமை

உண்மை உணர்வோடு,
என்றும் நன்மை செய்து,
பொல்லாங்கு பேசமால்,
உதவிடும் மனம் கொண்டு,
இருந்திடும் காலத்திலும்,
இல்லாத போதும்,
பெயர் நிலைக்க  வாழ்ந்திடல் வேண்டும்.

வாழ்ந்த விதம் ,
வளைந்து போவதல்ல ,
வளர்ந்து சிறப்பதே .

சொல்லால் , செயலால் ,
பொருளால், பொறுமையால் ,
உதவிடுதல் வேண்டும்.
உன் தன்மை ,உனதருமை .

புவிதனிலே வாழ்ந்து சென்றவர்கள்
பெயரெல்லாம் நினைவிலுண்டா ?
நிலத்ததுண்டா ?

செயற்கரிய செயல் என்பதல்ல ,
சமூக நலம் காத்தல் ,
உதவிதனை உறுத்தாமல் செய்தல் ,
நினைவில் நிறுத்தும் ,
பெயர் நிலைபெறும். 

செவ்வாய், 2 டிசம்பர், 2014

என் பயணம்

என்  பயணம்
விழியோரம் வழியும் கண்ணீர்
மழைத் தூரல் மறைத்திடும்
தனி ஆளாய் நான் போகும் பாதை
சரியென்றே மனம் சொன்ன நேர்மை

உறவுகள் நோகடிக்க
உண்மைகள் உறங்கிக் கிடக்க
உயர்வுகள் ஒழிந்திருக்க
பொறுமையே சரி என்று
ஒதுங்கிப் போகிறேன்

செல்வமும் செழிப்பும் பார்தரிந்தேன்
பணமே பிரதானம் என்பாரின்
பண்பாடும் உடன் அறிந்தேன்
புறம் பேசி வரம் கொடுக்கும் வள்ளல்கள்
வாழும் விதம் நான் அறிவேன் 

அரசன் அன்றே கொல்வான் 
தெய்வம் நின்று கொல்லும் 
தமிழன் சொன்ன வேதம் 
எல்லாம் தனக்கில்லை பிறர்க்கே 
என்பது அவரவர்  சொல்லும் பாடம் 

உண்மைக்கு உயர்வுண்டு 
உயர்வுக்கு வழியுண்டு 



சிறப்பின் சிறப்பு


ஓவியத்தின் தனித்தன்மை
ஓவியனின் உன்னதம்

காவியத்தின் தனிச் சிறப்பு
கதை தரும் கருத்து

சிலையின் முழு அழகு
சிற்பியின்  கை வண்ணம்

படைப்பின் ரகசியம்
பரவசத்தின் உச்சம்

எண்ணங்களின் கோர்வை
எழுத்தின் பிறப்பு

மன்னிக்கத் தெரிந்த மனசு
மறுக்கமுடியா உன்னதம்

மழலை தரும் மகிழ்ச்சி
வற்றாத ஜீவநதி