வெள்ளி, 7 மார்ச், 2014

தேவலோகக் கன்னி

வயல் வரப்பின் ஓரத்திலே,
தையல் ஒருத்தி நடந்துவர,
சாயல் அறியக் கண்டேன்,
மையல் கொண்டே பின் சென்றேன்.

பையவே பையவே, நடக்கிறாள் ,
பார்த்து பார்த்து ,சிரிக்கிறாள்,
கண்கள், மலர மலர, பார்க்கிறாள்,
கை தட்டி தட்டி, இசை சேர்கிறாள்.

கால்,  கொலுசுகள் சிணுங்க,
கைவளையல்கள் , குலுங்க,
நீண்ட பின்னல்  உஞ்சலாட,
தாவணியை இழுத்துப்
பிடித்து நடக்கிறாள்.

கன்னக் குழி அழகும் ,
சிங்காரக் கண்ணழகும் ,
செம்பருத்தி இதழழகும்,
சேர்த்து வைத்துப் பார்க்கையிலே ,
சிந்தை முழுதும் கிரங்குதைய்யா !

சொக்கத் தங்க நிறத்திலே ,
போட்டிருக்கும் தங்கம் தெரியலே ,
கூப்பிடும் குரல் அறிய ,
அருகே செல்ல ,
குயிலோசையே கேட்குதைய்யா !
 
இவள் நடமாடும் நந்தவனம் ,
மனதிலே  நிற்கும் பிருந்தாவனம் ,
இதம் சேர்க்கும் சங்கராபரணம் ,
இவள் தேவலோகக்  கன்னியோ ?