கற்றதை கற்பிப்பதே, என் கடமையென
காலமெல்லாம் பணி செய்தார்.
கற்கவே காலனும் வந்தான் போலும்.
வந்தவன் தன் கடமையைச் செய்துவிட்டான்!
கல்லூரியே வாழ்வு,
கல்லூரியே நினைவு,
கல்லூரியே மூச்சு,
என்றிருந்தவர்,
மூச்சின் முடிவும்,
கல்லூரியிலேயே முடிந்துவிட்டது.
பணியிலிருக்கும் காலத்திலேயே,
சிவன் பாதம் அடைந்தார்.
சீரான வாழ்வு,சிறப்பான பிள்ளைகள்.
அதிர்ந்து பேசாத அன்பு மனைவி.
ஆஸ்திக்கு ஒன்னு,
ஆசைக்கு இரண்டு,
மக்கட் செல்வங்கள்.
பேரன் பேத்திகள் என்று,
அத்தனையும் கண்டு மகிழ்ந்த உள்ளம்.
நிறைவு கண்டு நெகிழ்ந்த மனம் ,
சேரட்டும் பரம பதம்.
(உறவினர் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் 12.03.2015 மறைந்த
தினத்தன்று - அவர் நினைவாக...)
காலமெல்லாம் பணி செய்தார்.
கற்கவே காலனும் வந்தான் போலும்.
வந்தவன் தன் கடமையைச் செய்துவிட்டான்!
கல்லூரியே வாழ்வு,
கல்லூரியே நினைவு,
கல்லூரியே மூச்சு,
என்றிருந்தவர்,
மூச்சின் முடிவும்,
கல்லூரியிலேயே முடிந்துவிட்டது.
பணியிலிருக்கும் காலத்திலேயே,
சிவன் பாதம் அடைந்தார்.
சீரான வாழ்வு,சிறப்பான பிள்ளைகள்.
அதிர்ந்து பேசாத அன்பு மனைவி.
ஆஸ்திக்கு ஒன்னு,
ஆசைக்கு இரண்டு,
மக்கட் செல்வங்கள்.
பேரன் பேத்திகள் என்று,
அத்தனையும் கண்டு மகிழ்ந்த உள்ளம்.
நிறைவு கண்டு நெகிழ்ந்த மனம் ,
சேரட்டும் பரம பதம்.
(உறவினர் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் 12.03.2015 மறைந்த
தினத்தன்று - அவர் நினைவாக...)