ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

உன் விரலுக்குள் என் வாழ்வு....... 
எனது நடை வண்டி நீ..... 
கரிசன களிம்புக்காரன்..நீ . 
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்.....

தவழ்ந்தவன், தடுமாறி எழுந்தவன், 
அன்று நடை தடுமாறாமல் கை கொடுத்தாய் .
பின்பு தடை வாரா  வாழ்வு தந்தாய் . 
நீயே தாயே ! 

அன்று உங்கள் விரல்களே என் முதல் 
நடை வண்டி..
பின்பு தான் கண்டேன்  மர நடை வண்டி.
தந்தது தாயே நீயும் அப்பாவுமே .

எல்லாமும் தந்தீர் ,
என்னை ஆளாக்கினீர். 
என்னை உருவாக்கினீர் .
கரிசனமும் கண்டேன் .
கண்டிப்பும் கண்டேன் .
களிப்போடு நிற்கிறேன் .

தவறுகள் கண்ட போது 
மறவாமல் கண்டித்தீர்கள் ,
தண்டித்தீர்கள் ,
கண்ட பலன் உயர்வான வாழ்வு.

அன்பு, பாசம் ,அடக்கம், 
ஆண்றோர்  சொல் கேட்டல் ,
நற்சிந்தனை, நயமான பேச்சு ,
அத்தனையும் கண்டேன். 

பெற்றது ஒன்றல்ல ,
பெருமைகள் பல .
பெருமையோடு சொல்வேன்,
மறு பிறப்பிலும் நீயே என் தாயாக வேண்டும்.