வெள்ளி, 25 ஜூலை, 2014

மனம் மலராகும்

உடல் அழுக்கு வெளியேற
வாய்கள் ஒன்பது உண்டு

மன அழுக்கு வெளியேற
வழி தான் உண்டா ?
முறை தான் என்ன?

ஒன்பது வாசல்கள் வேண்டாம்
உயர்வான எண்ணம் ஒன்று போதும்

நிதர்சனத்தின் நிகரென்று
நிம்மதியாய்  வழியுண்டு

உதவிடும் எண்ணம்
உடன் செய்திடல் 

ஊருக்கு உழைத்திடல்
உண்மை பேசிடல்

நன்மை செய்திடல்
தவறேதும் செய்யாதிருத்தல்

உன் வழி இதுவென்றால்
உனக்கு நிகர் எவருண்டு

மனம் மலராகும்
இருந்து பார்
வாழ்ந்து பார்
இழப்பது ஒன்றுமில்லை