ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வாழ்க்கையின் பலம்

பிறப்பது ,பெருமையல்ல ,
பிறந்த பிறப்பு ,அருமை கருதி
அருமை காத்து ,சிறப்பு பெறுவதே
பெருமை.

வாழ்க்கையின் நலம் ,
நல்லவன் என்பதும் ,
வாழ்க்கையின் சுகம் ,
பிறர்க்கு உதவுவதும் ,
வாழ்க்கையின் பலம் ,
நேர்மை பேணுவதாகும்.

பணமும் ,வசதியும் ,
வரும் போகும்.
நிம்மதி பெற ,
நினைத்திடவேண்டும் ,
உனக்கும் கீழே ,
ஆயிரம் கோடி .

பணமும் ,வசதியும் ,
வரும் போகும்.
நின்று காத்திட ,
செய்திடவேண்டும்,
நிலையான தர்மங்கள் பல .



  

சனி, 30 ஆகஸ்ட், 2014

திருமண பதிவு செயலாக்கம்

                                               திருமணப்  பதிவு செயலாக்கம்


நான் புரிந்து கொண்ட அளவில்,

1வது நபராகிய திரு. _________________________________________________  , தாங்களும்,
2வது நபராகிய திருமதி .__________________________________________________ தாங்களும்,

உங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்கணவன் - மனைவியாக
வாழ்க்கையில் இணையும் நோக்கத்தில் வந்துள்ளீ ர்கள் .

உங்களுக்கு தெரியப் படுத்துவது  என்னவென்றால், இந்த திருமணப்  பதிவு செயலாக்கத்தின் படி , உங்களுடைய  திருமணம், இங்கு வந்திருக்கும் சாட்சிகளின் முன்பாகவும் , சட்டப்  படியும் ,உங்கள் சம்மதப் படியும்,
நீங்கள்  இருவரும் சட்டப் பூர்வமாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை
முழுதும் இணைந்திருப்பீர்கள் என்று ஒப்புக் கொள்வதாகும் .

இந்த திருமணமானது, செல்லத்தக்க நீதிமன்ற தீர்ப்பாணையின் பிரகாரம் அன்றி    உங்கள் வாழ்க்கை காலத்தில் கலைக்கப்படக் கூடியதல்ல.

உங்கள் வாழ்க்கை காலத்தில்,  இந்த திருமணம் நடை முறையில் இருக்கும் காலத்தில், உங்களில் ஒருவர் , எந்த சூழ்நிலையிலாவது      மறு திருமணப் பதிவு செயலாக்கம் செய்தால், உங்கள் செயல்  சட்டத்திற்கு எதிராக
குற்றம் செய்ததாகக்   கருதப்படும்.

தாங்கள், திரு ___________________________________________________________
திருமதி._____________________________________________________________அவர்களைஉங்கள் மனைவியாக சட்டப் பூர்வமாக  ஏற்றுக் கொள்கிறீர்களா?

தாங்கள், திருமதி  ___________________________________________________________
திரு._______________________________________________________________அவர்களை
உங்கள் கணவனாக  சட்டப் பூர்வமாக  ஏற்றுக் கொள்கிறீர்களா?

இருவர் சம்மததையும் ஏற்று ,நான் இப்பொழுது உங்கள் இருவரையும் கணவன் - மனைவி என்று அறிவிக்கிறேன்.வாழ்த்துக்கள் .


 

சனி, 23 ஆகஸ்ட், 2014

கேள்விகள்


எடுப்பதும் தொடுப்பதும்
வினையென்றால்
நினைப்பதை என்னவென்பது

பார்ப்பதும் நடப்பதும்
செயலென்றால்
மகிழ்வதை என்னவென்பது

படைப்பதும் காப்பதும்
மரபென்றால்
மரணத்தை என்னவென்பது

கொடுப்பதும் பெறுவதும்
தர்மமென்றால்
நேயத்தை என்னவென்பது

தொழுவதும் எழுவதும்
பக்தி யென்றால்
பணிவை என்னவென்பது

பொறுமையும் ,நயமான பேச்சும்,
அன்பென்றால்,
அரவணைப்பை என்னவென்பது ?






நல்லவை நடக்கும்


வேறான செய்திகள் மாறாக வந்து சேர,
வெந்து போகுது மனம்.
தவறான செய்கைகள் தடம் புரண்டு ஓட,
மனம் தத்தளிக்குது தினம்.

கூட இருந்தே, கெடுதல் செய்வார் செயல்,
கசந்து போகுது மனம்.
பணத்தாசையின் உச்சம் பரிதவிக்குது,
மாற்ற முடியாத  குணம்.

உண்மைக்கு மாறாக  நடப்பார்,
நன்மையே அறியாத பலர்.
வெளி வேஷம், பகட்டு ,
பொய், பித்தலாட்டம்,
கூடி நின்னு ஒன்னா நிக்குது.

ஒதுங்கி நின்னு பார்க்கும் கூட்டம்,
கை கட்டி சும்மா பார்க்குது .
தினம் நடுக்குது நாட்டிலே ,
மாற்ற நினைக்க யார் உளர்.

உண்மைக்கு கை கொடு,
உயர்வுக்கு தோள்கொடு,
தவறு கண்ட இடத்தில் தட்டி கேட்டிடு,
 எட்டி நின்று பார்க்கும் கூட்டம்,
உன்னதம் அறிந்து உன்னை உயர்த்தும். 

உன்னளவில் நீ உயர்ந்தால்,
நல்லவை  நடக்கும் நாளைய உலகில்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

தேசப் பிதாவே.

தேசப் பிதாவே,
நீ கால் பதிக்காத நாடு
அமெரிக்கா!
அயல் தேசம் என்றளவில்,
 உன் தபால் தலையை முதன்மையாய் ,
வெளியிட்டது அந்நாடே !

தேசப் பிதாவே ,
இருக்கும் காலத்தில்,
உனக்கு என்று பணம் ஏதும் சேர்க்கவில்லை ,
வங்கிக் கணக்கும் உன் பெயரிலில்லை ,
ஆனால் இன்று  ,
இந்திய தேசத்தின் பணத்தாளிளெல்லாம் ,
உன் படமே !

தேசப் பிதாவே !
இந்தியத் திரு நாட்டின்
விடுதலைக்கு வித்திட்டவன் ,
ஆயுதமேந்தாமல் ,அறப்போராட்டம்
நடத்தி அமைதி கண்டவன்
நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தவன். 

நோபெல் பரிசு ,
உலகின் தலையாயப் பரிசென்பார்.
உனக்கு நோபெல் குழு ,
அமைதிக்கான நோபெல் பரிசு
இருக்கும் போதும் வழங்கவில்லை
இறந்தபின்னும் வழங்கவில்லை.
உன் கள்ளமில்லா பொக்கை வாய்
சிரிப்பிற்கு ஈடாகுமா எந்தப் பரிசும்.

உன் ஆயுதமேந்தா அறவழியில்
உன் வழியே  எங்கள் வழியென்று
உன்னைப் பின் பற்றிய ஐய்வர்
பெற்றார் அமைதிக்கான நோபெல் பரிசினை!
காந்திய வழியை பின்பற்றியதால் பெற்றோம்
பரிசு என்பது அவர்தம்  கூற்று.

(அந்த ஐவர்
1.மார்டின் லூதர் கிங்     -அமெரிக்கா .
2.தலாய் லாமா                - திபெத்.
3.ஆங் சான் சூகி              - மியான்மர்.
4.நெல்சன் மண்டேலா - தென் ஆப்ரிக்கா. (jointly with Frederik William of  SA )
5.அடால்ப்போ பெரோஸ் எ ஸ்க் யூ வெல் - அர்ஜென்டினா .)    










ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

உன் விரலுக்குள் என் வாழ்வு....... 
எனது நடை வண்டி நீ..... 
கரிசன களிம்புக்காரன்..நீ . 
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்.....

தவழ்ந்தவன், தடுமாறி எழுந்தவன், 
அன்று நடை தடுமாறாமல் கை கொடுத்தாய் .
பின்பு தடை வாரா  வாழ்வு தந்தாய் . 
நீயே தாயே ! 

அன்று உங்கள் விரல்களே என் முதல் 
நடை வண்டி..
பின்பு தான் கண்டேன்  மர நடை வண்டி.
தந்தது தாயே நீயும் அப்பாவுமே .

எல்லாமும் தந்தீர் ,
என்னை ஆளாக்கினீர். 
என்னை உருவாக்கினீர் .
கரிசனமும் கண்டேன் .
கண்டிப்பும் கண்டேன் .
களிப்போடு நிற்கிறேன் .

தவறுகள் கண்ட போது 
மறவாமல் கண்டித்தீர்கள் ,
தண்டித்தீர்கள் ,
கண்ட பலன் உயர்வான வாழ்வு.

அன்பு, பாசம் ,அடக்கம், 
ஆண்றோர்  சொல் கேட்டல் ,
நற்சிந்தனை, நயமான பேச்சு ,
அத்தனையும் கண்டேன். 

பெற்றது ஒன்றல்ல ,
பெருமைகள் பல .
பெருமையோடு சொல்வேன்,
மறு பிறப்பிலும் நீயே என் தாயாக வேண்டும்.  




புதன், 6 ஆகஸ்ட், 2014

ஆறடியில் அருமை


என்னடி பெண்ணே, என்னடி பெண்ணே,
ஏனிப்படி இருக்கிறாய் !
சொல்லடி பெண்ணே, சொல்லடி பெண்ணே,
சொல்லவருவதை, சொல்லிவிடு!
கூறடி பெண்ணே, கூறடி பெண்ணே,
குறிப்பறிந்து,  பேசிவிடு !

குற்றம் பார்க்காதே,
குறைகள் பேசாதே,
வாழ்கைச்  சக்கரத்தில்,
சூட்சமங்கள் அதிகம் .
சாத்திரங்கள் அதிகம்.
சம்பிராதயங்கள் அதிகம்.
சார்ந்திருந்து வாழ்ந்து விடு ! 

இயல்பான வாழ்கை,
எற்றமுடன் பெற்று,
பொறுமை பேணி காத்து,
பேரிடர்கள் தவிடாக்கி ,
பெருமைகள் சேர்த்திடுவாய் .

ஆறடியில் அருமை இருக்கு .
அதனை அனுதினமும் நினைத்திடுவாய் .

ஓரடியில்  பெயரும்
ஈரடியில்  வாழ்வும்
மூன்றடியில் நினைவும்
நாலடியில்  நலமும்
ஐந்தடியில் வளமும்
ஆறடியில்  மண்ணும்
யாவும் பெற்று வாழ்வு சிறக்க
வாழ்ந்திடுவாய் !

(ஓரடி      - ஒழுக்கம்.
ஈரடி         - குறள் போற்றி வாழ்தல்.
மூன்றடி - அறம், பொருள்,இன்பம்.
நாலடி     - நான்கு திசைகள்.
ஐந்தடி     - ஐய்ந்து வகை நிலம்.
ஆறடி      - வாழ்வின் முடிவு. )