திருப்பரங்குன்றத்தில் குடி கொண்டிருக்கும் செவ்வேல் முருகனே
முதலாம் படை வீடு கொண்டு முன்னிற்கும் முதல்வனே
செட்டி மக்கள் நாங்கள் செழிப்புற வேண்டும்
செய்யும் தொழில் யாவும் வளம் பெற வேண்டும்
தர்ம சிந்தனையும் தயை குணமும் கொண்டு செயல் பட வேண்டும்
வாழ்ந்த பெருமை வாய்மொழியாக மட்டும் இல்லாமல்
வரும் காலம் வாழ்ந்து காட்டி, வழி காட்ட வேண்டும்
இல்லை என்போர் இல்லாமல் போக வேண்டும்
குன்றத்து நாயகனே எங்கள் குறை தீர்க்க வேண்டும்
கருணை காட்டி என்றும் காத்தருள வேண்டும்.